• Aug 25 2026

மலையாள சினிமாவை ஒருபோதும் விடமாட்டேன் – கைரா வாசுதேவன்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகில் நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கலீபா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள கைரா வாசுதேவன், தற்போது அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்.

இத்திரைப்படத்தை இயக்குநர் வைசாக் இயக்கியுள்ள நிலையில், பிருத்விராஜுடன் இணைந்து நடித்ததன் மூலம் கைரா வாசுதேவனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

‘கலீபா’ திரைப்படத்தின் மூலம் கிடைத்த அறிமுகம், தனது திரையுலகப் பயணத்தில் முக்கியமான தொடக்கமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கைரா வாசுதேவன் கூறுகையில், ‘கலீபா’ திரைப்படத்தின் வெற்றி தனக்கு மிகப்பெரிய அறிமுகத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


மேலும், திரையுலகின் முன்னணி கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் தனக்கு மிகுந்த பெருமையை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெரிய நடிகர்களுடன் இணைந்து நடிக்கும்போது, அவர்களுக்கு இணையாக தன்னால் சிறப்பாக நடிக்க முடியுமா என்ற அழுத்தம் ஆரம்பத்தில் தனக்குள் இருந்ததாகவும் கைரா கூறியுள்ளார்.

ஆனால் நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் வைசாக் ஆகியோர் தன்னுடன் மிகவும் அன்பாக பழகியதுடன், அந்த அழுத்தத்தைப் போக்கி நம்பிக்கையையும் வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்” என்றும் கைரா வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

 

தனது எதிர்கால திரையுலகப் பயணம் குறித்து பேசியுள்ள கைரா, எத்தனை மொழிகளில் நடித்தாலும் மலையாள சினிமாவை ஒருபோதும் விட்டுவிடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

மலையாளத் திரையுலகை தான் தனது வீடாக கருதுவதாகவும், கேரளாவுக்கு வெளியே இருந்து வந்த நடிகை என்ற உணர்வே தனக்கு ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கலீபா’ படக்குழுவினர் தனக்கு அளித்த அன்பும் ஆதரவும், மலையாள சினிமாவுடன் தனக்கு மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கைரா தெரிவித்துள்ளார்.

அதேவேளை, எதிர்காலத்தில் தென்னிந்தியாவின் பல்வேறு மொழித் திரைப்படங்களிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘கலீபா’ மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கியுள்ள கைரா வாசுதேவன், தற்போது புதிய திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி வருவதால், அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement