• May 13 2024

இலங்கை வந்த ரச்சித்தா... இந்திய கலைகர்களுடன் எடுத்த செல்பி... இதோ வைரல் புகைப்படங்கள்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்வை முன்னிட்டு இலங்கை வந்த ரச்சித்தா தனது பேஸ் புக் பக்கத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 


யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசை நிகழ்வு நடைபெறவுள்ளது. குறித்த இசைநிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் பிரபல தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்ட ஏற்பாட்டுகுழு நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


இதேவேளை இன்று இசை நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான  நடிகர் சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ்  நடிகை  ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி,ரச்சித்தா  உள்ளிட்ட பல கலைஞர்கள் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.


இந்நிலையில் ரச்சிதா தனது சமூகவலைதள பக்கத்தில் kpy பாலா, நடிகர் சிவா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.  இதோ அந்த புகைப்படங்கள்...

Advertisement

Advertisement

Advertisement