90 களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் விஜய், அஜித், சூர்யா, ரஜினி, சிம்பு உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, இன்று இரண்டு பிள்ளைகளின் தாயாக இருக்கின்றார்.
திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஓய்வு எடுத்த ஜோதிகா 36 வயதினிலே திரையில் மீண்டும் கம்பேக் செய்து "காற்றின்மொழி", "நாச்சியார்" போன்ற படங்களில் பங்கேற்று ரசிகர்களின் மனதுகளை எளிதாக கவர்ந்தார். இவர் தற்போது தனது பிள்ளைகளின் பெயரில் 2D தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அத்துடன் தற்போது "டப்பா பாட்டில்" என்ற வெப் சீரியலில் நடித்து வருவதுடன் "லைம்" எனும் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
சென்னையில் இருந்து மும்பை சென்றுள்ள ஜோதிகா இளமை திரும்புதே என்று சொல்லுவது போல் மீண்டும் 90 களில் இருந்தது போன்று மாறியுள்ளார். மிகவும் அழகாக எடுத்து கொண்ட புகைப்படங்களினை இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படங்கள் இதோ..
Listen News!