• May 20 2024

ஈஸ்வரி கேட்ட கேள்வியில் தலை குனிந்த குணசேகரன்..! அழுது புலம்பிய ஞானம்

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி  உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் மருமகள்கள் அனைவரும் வீட்டு வாசலில் சோகத்துடன் உட்கார்ந்து இருக்க, விசாலாட்சிக்கு குணசேகரன் போன் செய்து உண்மையை சொன்னதும் விசாலாட்சி அவர்களை அவமானப்படுத்துகின்றார்.

மேலும் ஞானத்தை கதிர் மற்றும் சக்தி காரில் வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும்போது, அண்ணன் முன்னாடி வாழ்ந்து காட்டுவேன் என சவால் எல்லாம் விட்டுட்டு இப்படி நிக்கிறேன் என சொல்லி அழுது கொண்டிருக்க, அந்த கரிகாலன் மட்டும் கையில கிடைச்சா சும்மா விடமாட்டேன் என கதிர் சொல்லுகிறார்.

அதன்பிறகு விசாலாட்சி அம்மாவிடம் உங்க புள்ள தான்  ஜெயிச்சுட்டு வெளியே போக வேண்டும் சொன்னார். அதுக்காக தான் நாங்க உட்கார்ந்து இருக்கோம் என நந்தினி சொல்ல, அவன் சொன்ன உங்களுக்கு எங்கடி போச்சு புத்தி என நக்கலாக கேட்கிறார் விசாலாட்சி. இதனால் ஈஸ்வரிக்கும் ஜனனிக்கும் கோபம் வருகின்றது.


அத்துடன் ஆவேசத்துடன் கிளம்பிய ஈஸ்வரி, குணசேகரகரிடம்  கொஞ்சம் பேசணும் எனக் கேட்க, நேத்து என்கிட்டே பேசி சவால்விட்டு கும்பல் எல்லாம் இப்போ அமைதியா இருக்கு. இப்போது நீ ஆரம்பிக்குறியாக்கும்  என கிண்டலாக பேசுகிறார் குணசேகரன்.

இதை தொடர்ந்து ஈஸ்வரி அடுத்தடுத்த கேள்விகளை கேட்டு குணசேகரனை கதிகலங்க செய்கிறாள். ஈஸ்வரி பேசுவதை கேட்டு ஜனனியும் தலைநிமிர்ந்து நிற்கிறாள். இது தான் இன்றைய எதிர்நீச்சல் எபிசோடுக்கான ப்ரோமோ. இனி என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement