• Jan 26 2026

பாட்டி நலமுடன் இருக்கிறாங்க... வதந்திகளை பரப்பாதீங்க.! ஜானகியின் பேத்தி வெளியிட்ட அறிக்கை

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி அவர்களின் புதல்வனான ஶ்ரீ வைத்யுலா முரளி கிருஷ்ணா அவர்கள், கடந்த ஜனவரி 22, 2026 அன்று மைசூரில் காலமானார். அவருடைய மறைவானது குடும்பத்தினருக்கும், இசை உலகத்திற்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில், ஜானகியின் பேத்தி அப்சரா வைத்யுலா தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கை வைரலாகி வருகின்றது. 

அதில் அவர், "அவரது மறைவு எங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் உணர்வுகளை புரிந்து, தனிமை தரக் கோருகிறோம். பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி நலமுடன் இருக்கிறார். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் அரவணைப்பில் நலமுடன் இருக்கிறார். தவறான தகவல்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று கூறியுள்ளார். 

எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பின்புல பாடல்களுக்காக பெயர் பெற்றவர். 50 ஆண்டுக்கு மேலாக இசை உலகில் திகழ்ந்த இவர், பல கதாபாத்திரங்களில் பாடிய பாட்டுகளால் ரசிகர்கள் மனதில் என்றும் வாழ்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement