• Feb 05 2026

பாடகர் எஸ்.பி. சரணை போனில் மிரட்டிய உதவி இயக்குநர்...! ஏன் இப்படிச் செய்தார் தெரியுமா?

Roshika / 4 months ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணிப் பாடகர் மற்றும் நடிகர் எஸ்.பி. சரண், தனது வாடகை வீட்டில் தங்கியுள்ள உதவி இயக்குநர் திருஞானம் அவரை மிரட்டுவதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


தகவலின்படி, சாலிகிராமம் பகுதியில் உள்ள அவரது குடியிருப்பை திருஞானம் என்ற உதவி இயக்குநருக்கு வாடகைக்கு அளித்திருந்தார் சரண். கடந்த 23 மாதங்களாக வாடகை தொகையை செலுத்தாமல் வந்த திருஞானம், பிணை முறையை மீறி வசித்து வருவதோடு, வாடகை கேட்கும் போதெல்லாம் ஆபாசமாக பேசிக்கொண்டு மிரட்டுவதாக சரண் தனது புகாரில் கூறியுள்ளார்.


இதையடுத்து சரண், ராமாபுரம் காவல் நிலையத்தில் அதிகாரபூர்வமாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர். திருஞானத்திடம் இருந்து விளக்கம் கோரப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ஆகியவையும் பரிசீலிக்கப்படுகின்றன.

இந்த சம்பவம், பிரபலங்களுக்கும் சொந்த வீடுகளை வாடகைக்கு விடுவது எவ்வளவு அபாயகரமாக இருக்கக்கூடும் என்பதற்கான உதாரணமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், தேவையான சட்ட உதவியுடன் சம்பந்தப்பட்ட நபருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement