• Sep 19 2024

7 நாட்கள் கல்யாணத்தை நடத்திய குக் வித் கோமாளி பிரபலம்-இப்படியெல்லாம் நடந்ததா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

சூர்யா, ஜீவா படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் குக் வித் கோமாளி ஸ்ருதிக்கா.ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது குக்வித் கேமாளி நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் சினிமாவை விட்டு ஒதுங்கியதன் பிற்பாடு திருமணம், குழந்தை என பிஸியானவர் பல வருடம் கழித்து சமீபத்தில் யூடியூப்பில் வெளியான பேட்டி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனார்.

ஸ்ருதிக்காவின் பேட்டியை பார்த்த அனைவருக்கும் இந்த டயலாக் நினைவில் வந்து போயிருக்கும். “என்னா பொண்ணுப்பா” கொஞ்சம் கூட அலட்டல் இல்லாமல் சிரித்துக் கொண்டே, தன்னை தானே கலாய்த்து கொண்டு படு ஜாலியாக பேசியவரை ரசிகர்களுக்கு பிடித்து போனது.எனினும் அதன் பின்பு கிட்டத்தட்ட யூடியூப்பில் இருக்கும் அனைத்து முன்னணி சேனல்களிலும் அவரின் பேட்டி வெளியானது.

மேலும் இன்ஸ்டாவில் அவரின் ஃபாலோவர்ஸின் எண்ணிக்கையும் அதிகமானது. பீக்கில் இருந்தவரை அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து டி.ஆர்.பியை ஏற்றியது விஜய் டிவி. குக் வித் கோமாளி சீசன் 3ல் தனது சமையல் திறமையை வெளிப்படுத்திய ஸ்ருதிக்கா முதல் ஃபைனலிஸ்டாக இறுதி சுற்றுக்கு தேர்வானார்.குக் வித் கோமாளி மூலம் ஸ்ருதிக்காவை விட அவரின் கணவர் அர்ஜூன் பயங்கர ஃபேமஸ் ஆனார்.

“அர்ஜூன் அம்மா” என்ற பெயர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.மேலும் இப்போது ஸ்ருதிக்கா - அர்ஜூன் இருவரும் சேர்ந்து தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோக்களை வெளியிட தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இருவரும் சேர்ந்து முதன் முதலாக தங்களது கல்யாண ஆல்பத்தை பார்க்கும் WEDDING THROWBACK வீடியோவை யூடியூப்பில் ஷேர் செய்துள்ளனர்.

அத்தோடு இந்த வீடியோவில் இருவரும் பல விஷயங்களை ஷேர் செய்துள்ளனர். குறிப்பாக காதல், கல்யாணம் என 12 வருடத்திற்கு முன்பு நடந்த அனைத்து விஷயங்களையும் அதே ரசனை, காதலுடன் இருவரும் ஷேர் செய்த விதம் செம்ம க்யூட்டாக உள்ளது.மேலும் ஒரு விஷயம் தெரியுமா? ஸ்ருதிக்கா அடம் பிடித்து அவரின் அப்பாவிடம் கெஞ்சி, தனது கல்யாணத்தை 7 நாட்கள் நடத்தி இருக்கிறார். மெஹந்தி, சங்கீத், ரிசப்ஷன், பார்ட்டி, முகூர்த்தம் என 7 நாட்களுக்கு லிஸ்ட் போட்டு அதற்கு ஷாப்பிங் செய்து பில்லை தீட்டி இருக்கிறார்.

மும்பைக்கு சென்று அதற்காக ஷாப்பிங் செய்தாராம். அதுமட்டுமில்லை அவரின் முகூர்த்த பட்டு மாம்பழ கலரில் தான் இருக்க வேண்டுமென ஒரு நாள் முழுவதும் காஞ்சிபுரம் பட்டு கடைகளில் அலைந்து இருக்கிறார். வீட்டுக்கு ஒரே பெண் என்பதால் ஸ்ருதிக்கா கேட்ட அனைத்தையும் அவரின் அப்பா செய்து கொடுத்துள்ளார்.

மேலும் இதில் அர்ஜூனும் தனது பரிதாப கதையை பதிவு செய்து இருக்கிறார்.அத்தோடு ஸ்ருதிக்கா குடும்பம், அர்ஜூனை இரவு முழுவதும் தூங்கவே விடவில்லையாம். 2 மணிக்கு காபி கொடுத்து தூங்க விடாமல் செய்து ஸ்ருதிக்கா கழுத்தில் தாலி கட்ட வைத்தார்களாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement