• May 20 2024

கலங்கி நிற்கும் கண்ணம்மா-கடைசியில் நடந்த சம்பவம்- இன்றைய எபிசோடு அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா.இந்த சீரியல் கடந்த ரி.ஆர்.பி ரேட்டிங்கிலும் ரொப் 5 இற்குள் வந்தது.இவ்வாறு இருக்கையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

ஜானகி மற்றும் அவரது கணவர் இருவரும் காணாமல் போய்விட ஹாஸ்பிட்டலில் பாரதி, கண்ணம்மா தான் காரணம் என சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.மேலும் அந்த நேரத்தில் விக்ரம் அந்த இடத்திற்கு வர அவரிடம் நடந்த விஷயங்களை பாரதி கூறி அட்மின் என்றால் அட்மின் வேலையை மட்டும் பார்க்க சொல்லுங்க .இதன் முழு பொறுப்பை கண்ணம்மா தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என பாரதி கூறுகிறார்.

இன்னும் அரை மணி நேரத்தில் ஜானகி மேடம், ராமன் சார் இங்கே இருக்க வேண்டும் இல்லை என்றால் கண்ணம்மா மேல ஆக்சன் எடுக்க வேண்டும் என பாரதி கூறுகிறார்.

ஹாஸ்பிட்டலில் இருப்பவர்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு முறையாக தேடி இங்கேயும் காணவில்லை என வந்து சொல்ல கண்ணம்மா கலங்கி நின்றுள்ளார்.

மேலும் இந்த நேரத்தில் இன்னொரு டாக்டர் ஓடி வந்து செய்தியில் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர்கள் கடற்கரை ஓரம் சடலமாக கிடப்பதாக சொல்வதைக் கேட்டு பாரதி ஒரு வேலை அவர்களாக இருக்குமோ என சந்தேகப்பட விக்ரம் அதற்கு வாய்ப்பே இல்லை என உறுதியாக சொல்கிறார்.

இந்த பக்கம் ஜானகி மேடம் தன்னுடைய கணவர் ராமனை அழைத்து வந்து ஒரு ஜிலேபி கடையில் அமர்ந்து தன்னுடைய உடம்புக்கு இருக்கும் பிரச்சனை குறித்து பக்குவமாக எடுத்துச் சொல்ல அவர் கணவர் ஷாக்கடைந்து கண்கலங்கி அழுகின்றார்.

இந்த பக்கம் கண்ணம்மா இவர்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்க அப்போது இருவரும் மருத்துவமனைகள் வந்த நுழைந்து எங்க மேல தான் தப்பு என மன்னிப்பு கேட்கின்றனர். நான் தான் இவரை வெளியே அழைத்துச் சென்று என்னுடைய உடல்நிலை குறித்து பக்குவமாக எடுத்து சொன்னேன்.

அத்தோடு கண்ணம்மா மேல எந்த தப்பும் இல்ல அவ மேல யாரும் கோபப்பட வேண்டாம் என கூறுகிறார். பிறகு பாரதியிடம் ஆபரேஷன் பற்றி நாளைக்கு சொல்கிறேன் ஒரு நாள் மட்டும் டைம் வேண்டும் என கூறுகிறார்.இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement