• May 21 2024

நடுரோட்டில் போலீஸ் வந்தும் நடிகை பிரியா பவானி சங்கர் செய்த செயல்...ஷாக்கான ரசிகர்கள்...அவரா இப்பிடி..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

செய்தி வாசிப்பாளராக பிரபலமாகி சின்னத்திரையில் கல்யாண முதல் காதல் வரை சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இதன்பின்னர் வெள்ளித்திரையில் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

எனினும் தற்போது லீட் ரோலில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் பல ஆண்டுகளாக காதலித்து வரும் ராஜ்வேல் என்பவரை அவுட்டிங் சென்று ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

எனினும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கெட்டவார்த்தை பேசியிருக்கிறீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. நியூஸ் சேனலில் வேலைப்பார்த்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டு இருக்கும் போது ஸ்கூட்டியில் சென்றிருக்கும் போது ஒரு ஆட்டோகாரர் என்னை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசி வாய் விட்டார்.

எனக்கு கோபம் வந்து வண்டியில் இருந்து இறங்கி நடுரோட்டில் கண்டபடி சண்டைபோட்டு அவர் மன்னிப்பு கேட்கும் வரை சண்டையிட்டதாகவும் பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement