• Oct 23 2024

ஈஸ்வரி ரெஸ்டாரண்டில் அரை மணி நேரத்தில் நடந்த அதிசயம்! பொங்கியெழுந்த கோபி

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ரெஸ்டாரண்டுக்கு வந்த கஸ்டமர்ஸ் பணம் தரவில்லை என்றால் ரெஸ்டாரண்டை அடித்து உடைப்போம் என்று சண்டை போடுகின்றார்கள். அவர்களை  போலீசாராலும் சமாளிக்க முடியவில்லை. 

அந்த நேரத்தில் பாக்கியா பேங்க் மேனேஜருக்கு கால் பண்ண, அவர் போனை ஆன்சர் பண்ணவில்லை. இறுதியாக எடுத்ததும்  பாக்கியா ரெஸ்டாரண்டில் நடக்கும் பிரச்சினைகளை சொல்லுகின்றார்.

இதனால் அவர் இன்னும் அரை மணி நேரத்தில் உங்களுக்கு பணம் வரும் நீங்கள் வர வேண்டாம் நானே கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்கின்றார் . அங்கிருந்த கஸ்டமர்சிடம் அரை மணி நேரம் பொறுத்து இருக்குமாறு பாக்கியா சொல்கின்றார்.


அதன்படியே அரை மணி நேரத்தில் பேங்க் மேனேஜர் வந்து பாக்கியாவின் கையில் பணத்தை கொடுக்க அதன் பின்பு லிஸ்டில் இருக்கும் ஆர்டர் படி கஸ்டமருக்கு பணத்தை செட்டில் பண்ணுகின்றார் பாக்யா..

மறுபக்கம் செட்டில் பண்ணி பிரச்சனையை முடித்ததை அறிந்த கோபி ஆவேசப்படுகிறார். அந்த நேரத்தில் செழியன் வேலையைப் பற்றி கேட்கவும் பேசி விடுகின்றார். அதன் பின்பு மன்னிப்பு கேட்கின்றார். 

அதன் பிறகு தனது நண்பர் நாளைக்கு வருவார் நீ நாளைக்கு வந்து மீட் பண்ணு என்று செழியனை அனுப்பி வைக்கின்றார். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கோபியின் நண்பர் பாக்யா எப்படியும் ஜெயித்துக் கொண்டுதான் இருப்பார் நீ இப்படி பண்ணாதே என்று அட்வைஸ் பண்ணுகின்றார். ஆனாலும் தான் பாக்யாவை பழிவாங்குவேன் என்று கோபி ஒரு முடிவோடு இருக்கின்றார்.

Advertisement