இயக்குநர் h .வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் "ஜனநாயகன் " படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பூஜா ஹெட்ஜ் ,பொப்பி தியோல் ஆகியோர் நடித்து வருகின்றனர். விஜய் அரசியலுக்குள் நுழைந்தமையினால் இது இவரது இறுதி படம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணமாக படத்தின் தமிழ் நாட்டு தியேட்டர் உரிமைக்காக ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ,லலித் ,ags போன்ற நிறுவனங்கள் முயற்சி செய்துவந்துள்ளன. இந்த நிலையில் தற்போது உரிமை லலித்திற்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படக்குழு பெரிய விலை இவரிடம் கேட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு அவர் சம்மதித்தாரா இல்லையா என எதுவித தகவலும் தெரியவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில உரிமையாளர்கள் விஜய் அரசியலில் இருப்பதால் ஆளும் கட்சியால் ஏதும் பிரச்சனை வந்திடுமோ என ஒதுங்கி நிட்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!