• May 19 2024

கொதித்தெழுந்த தனம்-அடிச்சு திருத்தனும் என்ற ADK -நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் ஆரம்பமாகி மிகவும் விறுவிறுப்புடன் சென்று கொண்டு இருக்கின்றது.அதாவது சாந்தி அசல் கோலார் ஜி.பி.முத்து வெளியேறி பிக்பாஸ் வீட்டுக்குள் 18 பேரே உள்ளார்கள்.இந்நிலையில் 24ஆம் நாளில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்....

இண்டைக்கு எபிசோட் தனலட்சுமி அசீம் சண்டையோடு தான் ஆரம்பித்ததே.இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டிவி டாஸ்க் நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக அணியை உருவாக்கிக் கொண்டிருந்தார் மைனா. மேலும் இதில் ஆயிஷாவிடம் என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்து தனலட்சுமியிடம் கதிரவன் கேட்க அப்போது தனலட்சுமி, “எல்லாருக்கும் பிடித்தது போல் நடந்து கொள்ள வேண்டுமென்கிற சிந்தனையை ஆயிஷா மாற்றிக்கொள்ள வேண்டுமென்கிற கருத்தை நாம் முன்வைக்கலாம்” என்று தெரிவித்தார்.


எனினும் இதற்கு மைனாவிடம் நேரடியாக அசீம் பதிலளித்தார். அதன்படி, “நான் நான்கு வருடமாக ஆயிஷாவை பார்க்கிறேன், அவர் அப்போது இருந்தது போல் தான் இப்போதும் இருக்கிறார்” என்று கூறிக் கொண்டிருக்க பாதியில் எழுந்த தனலட்சுமி அசீம் சொல்வதில் தனக்கு உடன்பாடில்லை என்று கூற, இதற்கு அசீமோ, “இப்படிப் பேசும்போது பாதியில் எழுந்து சென்றால் என்ன அர்த்தம்? இது எல்லாருக்கும் போக தெரியும்.. நானும் போவேன்” என்கிறார்.

அதற்கு பதிலுக்கு தனலட்சுமியும், “போங்க எழுந்து போங்க” என்று கூறுகிறார். இப்படி இருவருக்கும் வாக்குவாதம் தொடங்கியது. இதில் அசீம்,  “தனலட்சுமி எல்லாரிடமும் எடுத்தெறிந்து பேசுற..  மேலும் இப்படி எங்களுக்கும் பேச தெரியும் .. நீ சொன்னால் எல்லாரும் அடங்கி போக வேண்டும் என்றில்லை” என்று கூறுகிறார். பதிலுக்கு தனலட்சுமியும், “உங்களுக்கு எடுத்தெறிந்து பேச தெரியும் என்பது எனக்கு தெரியும்ண்ணா.. உங்களை யாரும் அடங்கிப்போக சொல்லவில்லை.. நீங்களும் பேசுங்கள்!” என்கிறார்.


பின்னர் அசீம், “உன்னை விட சூப்பரா எனக்கும் கோபம் வரும் ” என்கிறார். அதற்கு தனலட்சுமி, “உங்கள் கோபத்தை நான் பார்த்து இருக்கிறேன்.. என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்.. சனியன் எனக்குனே வாரம் வாரம் வருது” என்று மீண்டும் பேசுகிறார்.


இவர்களின் வாக்குவாதம் பதிலுக்கு பதில் பேச நீண்டுகொண்டே சென்றது. இதனால் சுற்றியிருந்த போட்டியாளர்கள் இருவரையும் அமைதிப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் இருவருமே பேசிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் தனலட்சுமி வெளியே சென்று விட்டார். மற்றவர்கள் பெட்ரூமில் இருந்தனர். இதில் பின்னர் தனலட்சுமி வெளியே சென்று அழுதுவிட்டார். அப்போது அசீம் பேசிக்கொண்டிருக்க அவரை அமுதவாணன் வந்து சமாதானப்படுத்த முயற்சித்தார்.

இவ்வாறு இருக்கையில் ADK ராபேர்ட் மாஜ்டர் பேசிட்டு இருக்கும் போது ADK சொல்லுவார் அவன் கோபப்படுவதால் ஆனா அவனை கெட்டவன் என்று சொல்ல முடியாது.அவன் கேமிற்காக செய்ய போய் இப்படி மாட்டடிக்கொள்ளுறான்.ஆனால் இந்த தனலட்சுமி பிள்ளை யாரையும் மதிக்கிறது இல்லை.எது பேினாலும் கேட்குது இல்லைஇந்தப்பிள்ளையை பிடித்து செவிலிழேயே நாலு அப்பு அப்பினால் தான்சரி எனக் கூறுகின்றார்.நிறைய ஆம்பளைங் கூட இந்த பிள்ளை சண்டை போடுது ஆனா ஒரு பொம்பிளைங்க கிட்டையும் சண்டை போடல அப்பிடி போட்டு இருந்தா அவங்க செவிழிலேயே ஒண்ணு விட்டு இருப்பாங்க.என கூறுகின்றார்.

அசீமிற்கும் தனலக்சுமிக்கும் இடையில் நடந்த சண்டைக்கு அமுதவானன் தனலக்சுமி பக்க சார்பாக் பேசுகின்றார்.இதனால் அசீமிற்கும் அமுதவானன் இற்கும் இடையில் சண்டை உருவானது.

இன்னைக்கு எபிசோட் புல்லா தனலட்சுமி வைத்து கொண்டு போன மாதிரி உள்ளது.பின் எந்த குணம் மாற்ற வேண்டும் என்பது போல கேட்ட போது பலரும் தனலக்சுமி அட்வைஸ் கொடுத்தார்கள்.இதற்கு விக்ரமன் புது விதமாக ஒரு காரணத்தை கூறி சமுதாய  கருத்தை கூறி கடுப்பேற்றினார்.

பின் விக்ரமனின் குணத்தை மாற்ற வேண்டும் என்றால் என்ன சொல்லுவீர்கள் என்று கேட்டதும் பலரும் பல காரணத்தை கூறினார்கள்.ஆனால் மணிகண்டன் கூறியது தான் விக்ரமனுக்கு பிடிக்கவில்லை.வீட்டில் இவர் பேரசனல் வென்ஞ்ஞன்சை காரி பண்ணுறாங்க என கூறி அதில் ஒரு குட்டி சண்டையை போடுறாங்க.இப்படியே இந்த எபிசோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement