• May 05 2024

வனிதா குத்துப்பட்ட விவகாரம்! இது செட்டப் என்ற கஸ்தூரிக்கு பதிலடி! வைரலாகும் ட்வீட்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகை என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் நடிகை வனிதா. பல சர்ச்சைகளுக்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானார். இதனை அடுத்து பல ரியாலிட்ரி ஷோக்களில் பங்குபற்றி வருவதோடு திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.

இவரின் மகளான ஜோவிதா பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றார்.இதனால் இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சனத்தையும் பிரபல சேனல் ஒனறின் மூலம் செய்து வருகின்றார்.


அண்மையில், நள்ளிரவு ஒரு மணி அளவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சனத்தை முடித்துவிட்டு தனது காரை எடுக்க சென்ற போது, அங்கு வந்த மர்ம நபர் ரெட் கார்டு கொடுக்குறீங்களா? என்று கேட்டு தன்னை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியதாகவும், அந்த மர்ம நபரின் சிரிப்பு தன் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருப்பதாகவும் வனிதா கூறி, தாக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு இருந்தார். 

இதை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் இணையத்தில் வைரலானது. இதற்கு நடிகை கஸ்தூரி, 'வனிதா பொய் சொல்வதாகவும். அடிச்சவன் யாரோ, அதுக்கு பிரதீப் எப்படி பொறுப்பாக முடியும். தன் reviewவால் வந்த வினை. வனிதா போலீசுக்கும் போகமாட்டா. வனிதாவின் ருசிகரமான பொய்கள் யூடியூப் க்கும் விஜய் டிவி க்கும் content க்கு வேண்டுமானால் பயன்படும், போலீஸிடம் வியாபாரமாகுமா? என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்து இருந்தார்.


இந்த நிலையில்,  இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை வனிதா தற்போது ட்வீட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.அதன்படி அந்த பதிவில், 

'நான் ஒரு திறந்த புத்தகம். இந்த உலகத்தில் நான் எதையும் மறைக்கவில்லை. நான் மிகவும் நேர்மையானவள். எது நோய் என்று உங்களுக்கு தெரியும், கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்' என்று பதிவிட்டு இருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement