• Jul 27 2024

பாக்கியா மேல எந்த தப்பும் இல்லயே... நேரடியாக விஷயத்தை கேட்ட பழனி அக்கா! ஈஸ்வரி எடுத்த முடிவு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு பாக்கியாவின் குடும்பம் மற்றும் பழனிச்சாமியின் உறவினர்கள் வந்துள்ள நிலையில், மாமா எப்பதான் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்க? என பழனிச் சாமியிடம் விமல்  வினாவ, நீயும் கேட்க ஆரம்பிச்சிட்டியா என பழனி சொல்கிறார்.

அந்த நேரத்தில் உங்களுக்கு எப்படிப்பட்ட பொண்ணு வேணும் என எழில் கேட்க, எனக்கு என்ன விருப்பம் என்று நான் சொல்லாமலே அவங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என பழனி சொல்ல, அங்கு வந்த பாக்கியா வித்தியாசமான டேஸ்ட்ல உங்களுக்கு பிடிச்ச ஸ்வீட் பண்ணி இருக்கேன் என சொல்லி ஸ்வீட் கொடுக்கிறார். அதை வாங்கி சாப்பிடும்போது அவர் சொன்னதை நினைவுப்படுத்தி பார்க்கிறார் பழனி.

மேலும் சொல்லுமாறு ராமமூர்த்தி கேட்க, எங்க அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என சொல்ல, பாக்கியா அவரது அம்மாவை அழைத்துக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார வைக்கிறதை கவனிக்கிறார். என் அக்கா தங்கச்சிகளை அவங்களோட சகோதரி மாதிரி பார்த்துக்கொள்ளணும் என  சொல்ல பழனிச்சாமியின் சகோதரி சாரியில் ஏதோ கரைப்பட்டு விட்டதால் அதை தட்டி துடைக்கிறார் பாக்கியா அதையும் கவனிக்கிறார் பழனி.


இறுதியாக அவங்கள பார்க்கும் போதே மண்டைக்குள்ள லைட் எரியனும் என சொல்ல, பாக்கியா நிற்கிற  இடத்தில் உள்ள லைட்டுகள் எல்லாம் பளீச் என்று எரிய, பழனிச்சாமியின் ஹார்ட்டில் காதல் அம்பு விட்டது போல காட்டுகிறார்கள். இதை தொடர்ந்து பழனிச்சாமிக்கு பாக்கியா மீது காதல் ஏற்பட்டு அவரை கவனிக்க ஆரம்பிக்கிறார் பழனிச்சாமி. 

இதையடுத்து, பாக்கியாவுக்கு பழனியின் அம்மா சமைத்த காசு கொடுக்க அவர் வாங்க மறுக்கிறார். சரியென பழனியின் அம்மாவும் விட்டு விடுகிறார்.

அதன்பின், பாக்கியா குடும்பம் வீட்டுக்கு கிளம்ப, பழனி ஒருபக்கம் நெளிய, இனியாவை பார்த்து விமல் ஒரு பக்கம் நெளிகிறார். அவர்கள் போன பிறகு பழனியின் அம்மா, அக்கா அவரிடம் நேரடியாகவே பாக்கியாவை கல்யாணம் செய்யுமாறு கேட்க, அவர் முதலில் மறுக்கிறார். அதன்பின் நான் சொல்ல மட்டும் நீங்க ஒன்றுமே பண்ண கூடாது என சொல்லுகிறார்.

மறுபக்கம் பாக்கியா வீட்டாருடன் பழனிக்கு பொண்ணு பார்க்க முடிவு எடுத்து இருக்கிறார். ஈஸ்வரியும் தானும் பொண்ணு பார்த்து சொல்லுறேன் என முடிவு எடுத்துள்ளார்.இதுதான் இன்றைய எபிசோட். 

Advertisement

Advertisement