• Sep 20 2024

பாக்கியாவைப் பார்த்து போலீஸ் கேட்ட கேள்வி- திமிராகச் சென்ற ராதிகா- ஈஸ்வரியிடம் கதறி அழுத கோபி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வீட்டுக்கு வந்த போலீஸ் கோபியிடம் யார் உங்க மனைவி என்று கேட்க கோபி எதுவும் சொல்லாமல் இருக்க ராதிகாவின் அம்மா ராதிகாவின் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்துக் காட்டி இது நீங்க தானே கட்டினீங்க என சொல்ல கோபி ஆமாம் நான் தான் கட்டினேன் என்று சொல்கின்றார். பின்னர் அப்போது போலீஸ் இவங்க தான் உங்க மனைவி என்றால் உங்க அம்மா வேற யாரையோ மனைவி என்று சொல்லுறாங்க என்று கேட்கிறார்.


உங்க புள்ளையே சொல்றாரு ராதிகா தான் அவருடைய மனைவினு, அப்படி இருக்கும் போது அவங்கள இந்த வீட்ல இருக்கக்கூடாது என்று எப்படி நீங்கள் சொல்லலாம் என கேள்வி கேட்க ஈஸ்வரி பாக்கியா தான் இந்த வீட்டில இருப்பா இவ இருக்க கூடாது என ஈஸ்வரி சொல்கின்றார்.இப்படியே ராதிகாவின் அம்மாவுக்கும் ஈஸ்வரிக்கும் இடையில் மோதல் ஏற்படுகின்றது.

அப்போது போலீஸ் பாக்கியாவிடம் நிங்க எதுக்கு இஙங்க இருக்கிறீங்க என்று கேட்க பாக்கியா எதுவும் சொல்லாமல் இருக்கின்றார். பின்னர் போலீஸ்  எப்படிமா உங்க புள்ள மட்டும் வேணும் உங்களுக்கு உங்க மருமகள் வேண்டாமா? ராதிகா இங்கதான் இருப்பாங்க நீங்க ஏதாவது பிரச்சனை பண்ணா குடும்பத்துடன் தூக்கி உள்ள வைக்க வேண்டியிருக்கும் என ராதிகாவை வீட்டுக்குள் போக சொல்ல அவர் முறைத்துக் கொண்டு கிளம்புகின்றார்.

அதன் பிறகு ராதிகாவின் அம்மா என் பொண்ணுக்கு ஏதாவது தொந்தரவு கொடுத்தீங்க மொத்த பேரையும் தூக்கி உள்ள வச்சுருவேன் என மிரட்டி விட்டு செல்கிறார்.இதைத் தொடர்ந்து எல்லாரும் கோபியை ரவுண்டு கட்டி கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். அவ போலீச கூட்டிட்டு வந்து அவ்வளவு பேச்சு பேசும்போது நீ அமைதியாக இருக்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என ஈஸ்வரி கோபப்படுகிறார்.


ராமமூர்த்தி இரண்டு பிள்ளைகளுக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்தி எடுக்குற வயசுல உனக்கு அறிவுரை சொல்ற அளவுக்கு வாழ்ந்துட்டு இருக்க என திட்டுகிறார். நீ எங்கள சந்தோஷமா வச்சுக்க வேண்டாம் ஆனா நீயாவது நிம்மதியா இருக்கியா அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு இங்கேயும் இல்லாமல் அங்கேயும் இல்லாமல் மத்தளம் போல அடி வாங்கிட்டு இருக்க. உன் வாழ்க்கைல இருந்து ராதிகாவை மொத்தமா ஒழிச்சு கட்டு அப்பதான் உன்னால நிம்மதியா இருக்க முடியும் என ஆவேசப்படுகிறார்.இதெல்லாம் கேட்டு கோபி கண்ணீர் வடிக்கின்றார்.

பிறகு கோபி ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்க அம்மா என அவரை தொட போக தொடாத டா, கையை எடு எனக்கு இந்த வயசுல இவ்வளவு அவமானம் தேவையா? உன்னையும் உன் பொண்ணையும் பிரிக்க பார்க்கிறா? அதை கேட்க போனதுக்கு எனக்கு இந்த நிலைமையா? என்னை இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்றா என்று கோபப்பட கோபி நான் அவ கிட்ட பேசுறேன் என மேலே வருகிறார்.

மேலே வந்த கோபி ராதிகாவிடம் நீ எப்படி அம்மாவை வெளியே போக சொல்லலாம் என கேட்க உங்கம்மா குடிக்கிற காபி கப்பை தட்டி விட்டாங்க, கண்டபடி பேசினாங்க என்று சொல்ல இவ்வளவு நடந்து இருக்கா என கோபி குழப்பம் அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement