• Sep 12 2025

ஈஸ்வரியை இப்படி அலங்கோலமாக பார்க்க முடியலையே..! சோகத்தில் ரசிகர்கள்..! வெளியான ப்ரோமோ

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.அதில் ராமமூர்த்தியின் அஸ்தியை எழில் கடற்கரையில் கரைக்கின்றார். செழியன் எதுவும் பண்ண முடியாமல் அதை பார்த்து அழுது கொண்டிருக்கிறார்.


இதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த பாக்கியா கிச்சனுக்குள் செல்லும் போது அங்கு ராமமூர்த்தி கதிரையில் இருந்து கொண்டு பாக்கியாவை அழைப்பது போல நினைத்து ராமமூர்த்தி இருக்கும் கதிரையை பிடித்து அழுகின்றார். அதன் பின்பு ஈஸ்வரி பொட்டு இல்லாமல் இருப்பதை பார்த்து நீங்கள் இப்படி இருக்கிறத பார்க்கவே முடியவில்லை என இனியா சொல்லி கவலைப்படுகின்றார். 


பாக்கியாவும் நீங்கள் எப்போதும் போலவே இருங்கள் என்று ஈஸ்வரிக்கு பொட்டு வைத்து விடுகின்றார். இதுதான் தற்போது வெளியான ப்ரோமோ. பாக்கியலட்சுமி சீரியலில் ராமமூர்த்தி இறந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒரு சிலர் தாம் உண்மையாகவே அழுது விட்டதாக கமெண்ட் பண்ணி வருகின்றார்கள். ராமமூர்த்தி இல்லாத சீரியல் இனி எப்படி நகர போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



Advertisement

Advertisement