• Sep 20 2024

விபத்தில் சிக்கிய தனது ரசிகனுக்காக நடிகர் சூர்யா செய்த மிகப் பெரிய விடயம்- இணையத்தில் பரவி வரும் புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருக்கும் முக்கிய நடிகர் தான் சூர்யா. இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இருப்பினும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இயக்குநர் பாலா இயக்கத்தில் தனது 41 வது படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பானது கன்னியாகுமரியில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இவரது மனைவியான ஜோதிகாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் , சுதா கொங்கரா உள்ளிட்டோர் இயக்கத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர் ஒருவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை சூர்யா வீடியோ காலில் அழைத்து அவருடன் பேசியுள்ளார். அதனை அவரின் ரசிகர்கள் இணையத்தில் புகைப்படத்துடன் பரப்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement