• May 28 2024

சுந்தரியின் கழுத்தில் ஏறிய தாலி...கார்திக்கிற்கு காத்திருந்த அதிர்ச்சி..பரபரப்பு திருப்பங்களுடன் சுந்தரி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ரசிகர்களுக்கு ஏத்தாற்போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.அந்தவகையில் சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கனவுகளை அடைய எப்படியெல்லாம் முயற்சிக்கின்றார் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

கணவன் கார்த்திக் அனு என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு சுந்தரியை ஏமாற்றி விட்டார் என்ற விடயம் கொஞ்சம் கொஞ்சமாக சுந்தரி குடும்பத்திற்கு தெரிய வந்து விட்டது. இருப்பினும் சுந்தரியின் மாமாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சுந்தரியின் நண்பரான சித்துவிற்கு அவரது மாமன் மகளுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் இதை எப்படியாச்சும் குழப்பி விட வேண்டும் என சுந்தரியின் கார்த்தி புது திட்டத்தை போடுகின்றார்.

அதன்படியே கார்த்தி ஒரு புகைப்படத்தை எடுத்து அதனை சித்துவின் மாமா மகளிடம் கொண்டு போய் காட்ட இந்த திருமணம் நின்றுவிடுகின்றது.

இந்நிலையில் இவ்வாறு திருமணம் நின்றதும் சித்துவின் அப்பா சுந்தரியிடம் கெஞ்சுவது போல ஒரு ப்ரமோ வந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் தீயாய் பரவி வருகின்றது.அது என்னவென்றால் சித்துவிற்கும் சுந்தரிக்கும் திருமணம் நடைபெற்றது போன்று.இதைப்பார்த்தால் சுந்தரிக்கும் சித்துவிற்கும் சீரியலில் திருமணம் நிறைவு பெற்றுவிட்டது.




Advertisement

Advertisement