• Apr 27 2024

ஒன்றரை வருடம் மீடியா முன் செல்லக்கூடாது.. மகேஷ்பாபுவுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை ஒன்றரை வருடங்கள் மீடியாவை சந்திக்கக் கூடாது என இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி நிபந்தனை விதித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகுபலி’ ’பாகுபலி 2’ என வரிசையாக 1000 கோடி ரூபாய் வசூல் படங்களை எடுத்து சாதனை செய்த இயக்குனர் ராஜமவுலி, அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இந்த படம் அமேசான் காடுகளில் நடக்கும் கதை அம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவில் மகேஷ் பாபுவின் கெட்டப் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது.  எனவே இன்னும் ஒன்றரை வருடத்திற்கு மகேஷ் பாபுவை ரசிகர்கள் பார்க்க முடியாது என்பதும் அவர் மீடியா முன் தோன்ற மாட்டார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகளை கடந்த சில மாதங்களாக செய்து வரும் ராஜமவுலி அடுத்த கட்டமாக நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இருப்பதாகவும் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்கும் நடிகையை அவர் தேர்வு செய்து விட்டதாகவும் விரைவில் அது ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.



இந்த நிலையில் இந்த படத்தின் மகேஷ் பாபு கெட்டப், படம் ரிலீஸ் ஆகும் வரை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று எஸ்எஸ் ராஜமவுலி முடிவு செய்திருப்பதாகவும் இதனை அடுத்து மகேஷ்பாபுவை அழைத்த அவர் ஒன்றரை வருடங்களுக்கு வெளியில் தலை காட்டக்கூடாது என்றும் மீடியா முன் பேசக்கூடாது என்றும் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் முடியும் வரை வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாக கூடாது என்றும் கூறியுள்ளதாகவும் அதற்கு மகேஷ் பாபு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒன்றரை வருடத்திற்கு மகேஷ் பாபு மூன்று படங்களில் நடித்து விடுவார் என்றாலும் அவர் இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம் மிகப்பெரிய சம்பளம் என்றும் அவர் தற்போது வாங்கிவரும் சம்பளத்தை விட நான்கு மடங்கு சம்பளம் இந்த படத்தில் அவருக்கு பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement