• Apr 26 2024

லூசு மாதிரி இருந்த எஸ் ஜே சூர்யாவுக்குள் இப்படி திறமையா?- வியந்து பாராட்டிய எதிர்நீச்சல் சீரியல் பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்தத் தொடருக்கு சமீபகாலமாக மகடகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது.அதிலும் இந்தத் தொடரில்  வில்லன் குணசேகரன் தான் ஹைலைட்.காமெடி கலந்த வில்லத்தனத்துடன் இவருடைய நடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

இவர் சீரியலில் நடிக்க முதல் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ளார்.இந்த நிலையில் இவர் பிரபல நடிகரும் இயக்குநருமான  எஸ் ஜே சூர்யாவை பற்றி பேசிய விஷயம் தான் பெரிய அளவில் பேசப்படுகிறது. அதாவது எஸ் ஜே சூர்யா லயோலா காலேஜில் படித்து முடித்த பிறகும் வாடனிடம் பணம் கொடுத்து அங்கேயே ஹாஸ்டலில் தங்கி இருந்தாராம்.


மேலும் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்கும் எப்போதுமே நடந்து தான் வருவாராம். சட்டை எல்லாம் சுருக்கம் சுருக்கமாக போட்டு கொண்டு சாதாரணமாக இருப்பார். ஆனால் வாலி படத்தின் கதையை அஜித்திடம் சொல்லும்போது நானும் அருகில் இருந்தேன் என மாரிமுத்து கூறினார். அவர் கதையை சொல்லும் விதத்தை பார்க்கும் போது தான் நான் அசந்து போய்விட்டேன்.

கண்டிப்பாக இவ்வளவு பெரிய ஆளாக எஸ் ஜே சூர்யா வருவார் என்று நான் அப்போது நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும் வாலி படத்தின் இரட்டை அஜித் நடிக்கும்போது கேமராமேனுக்கு சில விஷயங்களை எஸ்.ஜே சூர்யா கூறியிருந்தார். அதாவது வில்லன் அஜித்தை தூரத்தில் இருந்து முழுமையாக காட்ட வேண்டும் என்றும், ஹீரோ அஜித்தை அருகில் வைத்து அழகாக காட்ட வேண்டும் என்றும் கூறினாராம்.


அப்போது ஒளிப்பதிவாளர் ஜீவா, லூசு மாதிரி இருந்த எஸ் ஜே சூர்யாக்குள் இப்படி திறமையா என ஆச்சரியப்பட்டாராம். மேலும் அப்போது எஸ் ஜே சூர்யா சாதாரணமாக ஒரு மனிதனாக இருந்த நிலையில் இன்று புலியாக மாறி உள்ளான் என்று பெருமையாக இயக்குநர் மாரிமுத்து அந்த பேட்டியில் பேசி இருந்தார் என்பதும் குறிப்பிடதத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement