• Jul 07 2025

எஸ்.ஜே. சூர்யாவுடன் கூட்டணி அமைக்கும் பிரபல இசையமைப்பாளர்...! யார் தெரியுமா ?

Roshika / 6 hours ago

Advertisement

Listen News!

பல திரைத்துறையாளர்களைப் போல் இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் முன்னணி நடிகராக தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் எஸ்.ஜே. சூர்யா. "வாலி", "குஷி", "நியூ" போன்ற வெற்றிப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவுக்கு புதிய பரிமாணங்களை கொண்டுவந்தவர், இப்போது தனது கனவுத் திட்டமான "கில்லர்" படத்தின் மூலம் ஒரு தசாப்தத்துக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் சூர்யாவாக திரும்பிறார்.


"கில்லர்" படம், எஸ்.ஜே. சூர்யா இயக்கும் அடுத்த பெரிய படைப்பாக இருக்கும் என்பது உறுதி. இது வெறும் திரும்பி வந்த இயக்குநரின் முயற்சி மட்டுமல்ல, அவர் கூறும் போதுபோல, இது அவரது "கனவுத் திட்டம்". கதை விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றாலும், இது காதல் நகைச்சுவையும், உளவு "கில்லர்" படம், எஸ்.ஜே. சூர்யா இயக்கும் அடுத்த பெரிய படைப்பாக இருக்கும் என்பது உறுதி.


இப்போது தமிழ் சினிமா உலகம் பான் இந்திய திசையில் நகர்கிறது. கில்லர் இப்படியே பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் புது முயற்சிகளில் ஒன்றாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து முக்கிய இந்திய மொழிகளில் இப்படம் வெளியிடப்படும். இது எஸ்.ஜே. சூர்யாவை இந்திய அளவிலான இயக்குநராகவும் நடிகராகவும் மீண்டும் உயர்த்தும் வாய்ப்பாகும்.


இந்தப் படத்தின் மிக முக்கியமான ஹைலைட்  இசைஞானி ஏ.ஆர். ரஹ்மான் சார் இணைகிறார் “கில்லர்” படத்தின் இசையை ஏ.ஆர். ரஹ்மான் அமைப்பார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய இசையின் சர்வதேச திலகமாக விளங்கும் நம்ம இசை புயல், இசை ஜாம்பவான், நாட்டின் பெருமை ரஹ்மான் சார், சூர்யாவுடன் மீண்டும் இணைவது, இந்தப் படத்திற்கு ஒரு புதிய உயரம் சேர்க்கும். இருவரும் தங்கள் துறையில் தனித்திறமை படைத்தவர்கள் என்பதால், இந்த கூட்டணியில் இருந்து மிகவும் தனிப்பட்ட மற்றும் மாயாஜால இசைகள் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எஸ்.ஜே. சூர்யா பதிவிட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது . 


"கில்லர்" ஒரு சாதாரண திரும்பிப் பார்ப்பதற்கான திரைப்படம் அல்ல. இது ஒரு இயக்குநர் தன்னுடைய கனவைக் கையில் பிடித்து மீண்டும் அதை திரையில் பதிக்க முயற்சிக்கும் ஒரு வலிமையான பயணம். காதலும், நகைச்சுவையும், சஸ்பென்ஸும் கலந்த ஒரு திரில்லர்  அதுவும் பான் இந்தியா அளவிலான முயற்சியாக  இது ரசிகர்களுக்குப் பெரும் பரிசாக அமையும். எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணையும் இந்த யதார்த்தமான கூட்டணியை நம்முடைய தமிழ் திரை உலகமே  எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது. 





Advertisement

Advertisement