• May 20 2024

“செல்வராகவன் அப்படித்தான் .. அந்த நேரத்தில் தனுஷ் தான் எனக்கு ஆறுதலாக இருந்தார்” : சோனியா அகர்வால்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தன் சிறப்பான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இன்று வரை இடம்பிடித்துள்ளார் சோனியா அகர்வால். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் சோனியா அகர்வால்.

முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார். அதைத்தொடர்ந்து சிம்பு, தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நாயகியாக வலம் வந்தார்.

மேலும் அந்த நேரத்தில் இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாட்டினால் இருவரும் பிரிந்தனர். அதைத்தொடர்ந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகின்றார் சோனியா அகர்வால்.

இந்நிலையில் தற்போது சோனியா அகர்வால் நடிகர் தனுஷை பற்றி சில விடயங்களை பேசியுள்ளார். காதல் கொண்டேன் படம் தனுஷிற்கும் எனக்கும் மிகமுக்கியமான திரைப்படம். அப்படம் தான் ரசிகர்களிடம் எங்களை கொண்டு சென்றது. அப்படத்தில் நான் சிறப்பாக நடித்துள்ளேன் என்றால் அதற்கு செல்வராகவன் தான் காரணம்.

மேலும் அவர் மனதில் நினைத்த காட்சியை படமாக்கும் வரை நம்மை விடமாட்டார். சில சமயங்களில் மிகவும் கோபமாக திட்டி விடுவார். அந்த சமயத்தில் நான் சோகமாக மாறிவிடுவேன். ஆனால் தனுஷ் தான் அந்த நேரத்தில் எனக்கு ஆறுதலாக இருந்தார்.

எனினும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நான் நிறைய டேக் எடுத்திருப்பேன். எனினும் அப்போதெல்லாம் தனுஷ் மிகவும் பொறுமையாக இருந்தார் என்று கூறினார் சோனியா அகர்வால். மேலும் அப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் செல்வராகவனும சோனியா அகர்வாலும் காதலிக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement