• May 20 2024

பெரிய நடிகர்களின் சம்பளம்.. ஓப்பனாக பேசிய உதயநிதி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் உதயநிதி. படத்திற்கு படம் தன் நடிப்பை மெருகேற்றி வரும் உதயநிதி தற்போது நெஞ்சுக்கு நீதி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது. இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் படத்திலும் உதயநிதி நடித்து வருகின்றார். இந்நிலையில் தனது ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்பாக பல படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் வருகின்றார் உதயநிதி.

மேலும் குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் என அனைத்து படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகின்றார். ரஜினியின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் என பல பெரிய படங்களை உதயநிதி வெளியிட்டு வருகின்றார்.

இது ஒருபுறம் சர்ச்சையை கிளம்பினாலும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்கும் சன் நிறுவனத்திற்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனினும் அதன் காரணமாகவே அவர்கள் படத்தை நாங்கள் வெளியிட்டு வருகின்றோம் என்றார் உதயநிதி.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் படங்களை தவிர மற்ற மொழி படங்களான புஷ்பா, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப் ஆகிய படங்கள் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது வருகின்றது. இதன் காரணமான தமிழ் சினிமா மீதும், தமிழ் ஹீரோக்கள் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

தமிழ் நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் படத்தின் பட்ஜெட் அனைத்தும் அவர்களின் சம்பளத்திற்கே செலவாவதால் படத்தின் தரம் குறைவதாக பல விமர்சனங்கள் எழுந்தது. எனினும் இந்நிலையில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி தற்போது இது பற்றி பேசியுள்ளார்.

அதாவது பெரிய நடிகர்களின் சம்பளத்தை குறைத்தால் தான் படங்கள் ஓடும் என்று கூறினார்.மற்ற மொழி படங்களில் நடிகர்களின் சம்பளத்தை விட மேக்கிங்கிற்கு தான் அதிகம் செலவிடப்படுகிறது. அதன் காரணமாகத்தான் படங்கள் ஓடுகின்றன எனவும் கூறினார் உதயநிதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement