• Apr 26 2024

சைக்கிள் ரேஸ் முடிந்ததும் மயங்கி விழுந்த சந்தியா.. ஷாக்கான சிவகாமி குடும்பம் – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் தான் ராஜாராணி-2.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்..

சந்தியா சைக்கிள் ரேசில் ஐந்தாவது இடத்தில் முதலாவது ஆளாக வந்து மயங்கி விழுகிறார். பிறகு அவரை அழைத்துச் சென்று முதல் உதவி அளிக்கின்றனர்.

இந்தப் பக்கம் அர்ச்சனா மற்றும் செந்தில் என இருவரும் ஊஞ்சலிலும் உட்கார்ந்து தேர்தல் குறித்து பேசி சந்தோஷப்பட்டு கொண்டிருக்க அப்போது சரவணன் வர இருவரும் சரவணனுக்கு நன்றி சொல்ல இதுக்கெல்லாம் எதுக்கு நன்றி தேர்தலில் ஜெயித்து நல்லது செய்ய வேண்டுமென சொல்கிறார். ஆனால் சரவணனுக்கும் செந்தில் தேர்தலில் நிற்க போகிற விஷயம் தெரியாது. அதேபோல் செந்தில் அர்ச்சனாவுக்கு சரவணன் தேர்தலில் நிற்கும் விஷயம் தெரியாமல் இருக்கிறது.

அடுத்து செந்தில் தன்னுடைய குழந்தையை கொஞ்சிக் கொண்டிருக்க அப்போது அர்ச்சனா வந்து ஒரு கடை வாடகைக்கு வருதே அதை நாமலே எடுக்கலாமென பேச செந்திலும் நானும் அதே யோசனையில் தான் இருப்பதாக சொல்கிறார்.

மேலும் இந்த பக்கம் சந்தியா மயக்கத்தில் இருக்க ஜோதி தண்ணீரை தெளித்து அவளை நினைவுக்கு கொண்டு வர அப்போது ரேசில் தான் ஜெயித்தது பற்றி கேட்டு சந்தோஷப்படுகிறார் சந்தியா. இருந்தாலும் அப்துல் ஐந்தாவது இடமும் ஒன்றாவது இடமும் ஒன்றாக என நக்கல் அடித்து விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.


அடுத்து சந்தியா சரவணனுக்கு போன் போட சிவகாமி ஃபோனை வாங்கி பேச ஐந்தாவது இடத்தில் வந்த விஷயத்தை கேட்டு வருத்தப்படுகிறார். சந்தியா அடுத்த முறையில் இருந்து முதலாவது இடத்தை பிடிக்க நிச்சயம் முயற்சி செய்கிறேன் என வாக்கு கொடுக்கிறாள். இதன் பிறகு போனை வைத்ததில் சிவகாசி அவளுக்கு முன்னாடி நான்கு பேர் இருக்காங்க என வருத்தப்பட அவளுக்கு மற்றவர்கள் ஆறுதல் கூறுகின்றனர்.


மேலும் இப்படியான நிலையில் அடுத்ததாக சந்தியாவும் சரவணனும் ஃபோனில் பேசிக்கொள்ள சரவணன் சந்தியாவுக்கு விடுகதை ஒன்றைக் கேட்க அதற்கு பதில் தெரியாமல் முழிக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.



Advertisement

Advertisement

Advertisement