தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சமந்தா, பல பிரச்சனைகளையும் தாண்டி தற்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார் . இவர் தற்போது இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிதி மோரும் தங்களுடைய காதலை உறுதிப்படுத்தாத நிலையில் சமந்தா அவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது 'புதிய தொடக்கம்' என்று பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் சமந்தா அவரை காதலிக்கின்றாரா? திருமணம் செய்து கொள்ளப் போகின்றாரா? என்று கேள்விகளை எழுப்ப தொடங்கியுள்ளனர். தற்போது இது சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.
ஏற்கனவே சமந்தாவும் ராஜும் ஒன்றாகவே பல இடங்களில் சுற்றி வருகின்றனர். ஜிம், கோவில், ஷாப்பிங், ஏர்போர்ட் என எங்கு பார்த்தாலும் இருவரும் கைகோர்த்தபடி நடமாடி வருகின்றார்கள். தற்போது இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக பேசப்படுகிறது.
ஏற்கனவே சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றார். அது போலவே ராஜ் ராஜ் நிடிமோரும் ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!