• May 19 2024

மியூட் செய்யப்பட்ட ரவீனாவின் குற்றச்சாட்டு! பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுத்தது சரிதான்! அம்பமான ரகசியம்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி இருந்த பிரதீப் சமீபத்தில் பிக் பாஸ்  நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றபட்டார். 

அவருக்கு பலரும் வெளியில் ஆதரவு தந்தவனம் உள்ளனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்ததில் இருந்தது டுவிட்டரில் பல பதிவுகளை டுவிட் செய்த வண்ணம் உள்ளார். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அனைவரும் தமது குற்றச்சாட்டுகளை முன்வைக்க, ரவீனா சொன்ன குற்றச்சாட்டு ஒன்று மியூட் செய்யப்பட்டது.


இவ்வாறான நிலையில், அவ்வாறு ரவீனா என்ன சொன்னார் என்பது பற்றிய  வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதை தொடர்ந்து பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது சரிதானோ என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதன் காரணமாகவே,  ஏன் கமல் பிரதீப்பிடம் விளக்கம் கேட்காமல் வெளியில் அனுப்பினார் என்பது தெளிவாகியுள்ளது.


அதன்படி,  பிரதீப் குறித்து ரவீனா புகார் அளித்த போது தனது அர்னாகயிறு குறித்து பேசியதாக கூறியிருந்தார். அப்போது சில வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டது.

ரவீனாவின் இந்த வார்த்தைகளை கேட்ட கமல்ஹாசன் கோபமடைந்த நிலையில் காணப்பட்டார். எனினும் அப்போது ரசிகர்களுக்கு காரணம் தெரியவில்லை.

தற்போது வெளியான வீடியோவில், ஒரு டாஸ்க் நடக்கும்போது நான் ஜெயித்தால் 'கக்காவை வாயில வாங்கிகுவியா?' என்று பிரதீப் ரவீனாவை பார்த்து கேட்டுள்ளார். இதற்கு சீ..சீ என்று ரவீனா கூறியதை தொடர்ந்து கமல்ஹாசனிடம் இதை சொல்லும்போது மியூட் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், இந்த மாதிரி பேசிய பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்ததில் எந்த தவறும் இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement