• Oct 07 2024

’சூர்யா 44’ படத்தை அவசர அவசரமாக முடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ்? ரஜினி கொடுத்த உறுதியால் அதிரடி..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் அந்தமானில் நடந்தது என்பதும் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் படக்குழுவினர் ஊட்டி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஒன்லைன் கதையை ரஜினியிடம் கார்த்திக் சுப்புராஜ்  கூறிய போது அவர் கதையை ஓகே செய்து ’கூலி’ படம் முடிந்ததும் படத்தை தொடங்கலாம் என்றும் அதற்குள் நீங்கள் ’சூர்யா 44’ படத்தை முடித்துவிட்டு ஆரம்பகட்ட பணியை தொடங்குங்கள் என்று கூறியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. .

இந்த படம் அனேகமாக ’பேட்ட’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்றும் ஒரு தரப்பினரும் இது புது விதமான கதை அம்சம் கொண்ட படம் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். ரஜினியின் படம் கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதை அடுத்த ’சூர்யா 44’ படத்தை திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே முடிக்க கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்து இருப்பதாகவும் எனவே அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதியில் ’சூர்யா 44 ’ படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் இதனை அடுத்து அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் - கார்த்திக் சுப்புராஜ் படத்தில் பணிகள் தொடங்கும் என்றும் அதற்குள் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் கூலி படத்தையும் முடித்துவிட்டு ரஜினிகாந்த் தயாராகி விடுவார் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement