• Sep 27 2024

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்! விவாகரத்து கேள்விக்கு பதில்...

subiththira / 18 hours ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் உலக அழகி நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவருடைய அழகு மற்றும் சிறந்த நடிப்பு மூலம் பல கோடி தமிழ் ரசிகர்களையும் சம்பாதித்தார்.


அவர் பாலிவுட் முன்னணி நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தார் ஐஸ்வர்யா. நீண்ட இடைவெளிக்கு பிறகு, தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.


இந்நிலையில், ஐஸ்வர்யா மற்றும் அபிஷேக் பச்சன் இருவரும் விவாகரத்து பெற போகிறார்கள் என்று அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது, இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யாவின் கைகளில் அந்த மோதிரம் இருந்திருக்கிறது. இதன்மூலம் ஐஸ்வர்யா தனக்கு விவகாரத்து எல்லாம் நடக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார்.

Advertisement

Advertisement