• May 21 2024

நடுச்சாமத்தில் கமல் வீட்டிற்கு சென்ற ரஜனி- இது தான் விசயமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இரு பெரும் தூண்களாக திகழ்ந்து வருபவர்கள் தான் ரஜனிகாந்த் மற்றும் கமல்ஹாசன்.

இவர்கள் இருவரது படங்கள் வெளியானால் இன்று வரை அதே வெரவேற்ப்பு தான் உள்ளது.அந்த வகையில் சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் தமிழகத்திலே அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி ரஜினியின் 2.0 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையும் படைத்திருக்கிறது.

மேலும் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் கமல் திரையுலகின் நல்ல நண்பர்கள் என அனைவரும் அறிந்த விஷயம்.மேலும் அப்படி அவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் ஒன்றாக நடித்து வந்து பின்னர் அவர்கள் இருவரும் தங்களுக்கு என தனித்தனி பாதையை தேர்ந்தெடுத்து கொண்டார்கள்.

கமல் படத்தை பார்த்து ரஜினியும், ரஜினி படத்தை பார்த்து கமலும் பாராட்டி வருவதை பார்த்துள்ளோம், அப்படி பல வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விஷயம் தான் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

ஆம், கடந்த 1989 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் அபூர்வ சகோதர்கள் படம் வெளியானபோது ரஜினி தன் பட ஷூட்டிங்கில் இருந்திருக்கிறார். அத்தோடு மனசெல்லாம் கமல் படம் மீதே இருந்திருக்கிறது.இதன் பின் ஷூட்டிங் முடிந்ததும் இரவு 11 மணி காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார் ரஜினி.

மேலும் அவருக்கு படம் மிகவும் பிடித்துவிட்டது. உடனே கமலை சந்தித்து பாராட்ட துடித்திருக்கிறார். அப்பொழுது மணி 2.30. இருந்தாலும் கமல் வீட்டிற்கு சென்று தூங்கிக் கொண்டிருந்த அவரை எழுப்பி பாராட்டியிதாக ஒரு தகவல் இணையத்தில் ரசிகர்களிடையே பரவி வருகின்றது.

பிற செய்திகள்

Advertisement

Advertisement