• May 18 2024

முன்னாள் அமைச்சருக்கு எதிராக நடிகை அளித்த புகார்:வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நடிகை சாந்தினி பாலியல் புகார் அளித்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் அமைச்சருக்கெதிராக அளித்த புகாரை துணை நடிகை சாந்தினி திரும்பப் பெற்றுக் கொள்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் ’நாடோடிகள்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் நெருக்கமாக பழகியதாகவும் இதன் காரணமாக கர்ப்பமாக இருந்த நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பத்தை கலைக்க வைத்ததாகவும் தன்னை திருமணம் செய்ய மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரளித்தார்.

மேலும் துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் மணிகண்டன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதன் பின்னர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் அதன் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்

இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.

மேலும் இந்த வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. எனினும் இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தன் மீதான புகழுக்கு களங்கம் விளைவித்ததாக அவர் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Advertisement

Advertisement