• Sep 19 2024

பணத்தால் அடித்துக்கொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்-நடந்தது என்ன?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் அனைத்தும் ஹிட் என்று தான் கூற வேண்டும்.அந்தவகையில் சகோதர உறவை முதன்மையாக கொண்டு நகரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.3 ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் பெரு ஆதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

இந்த சீரியலில் கடந்த 1 மாதக்காலமாக முல்லை - கதிர் குழந்தை பிரச்சனை பற்றிய எபிசோடு தான் ஒளிப்பரப்பாகி வருகின்றது. ஆரம்பத்தில் ரசிகர்கள் இதை சுவாரசியமாக பார்த்தாலும், தொடர்ந்து முல்லை - கதிர் அன்பு சிலரை வெறுக்க வைத்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

இதனால் இந்த சீரியல் கடந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில் சறுக்கலை சந்தித்து இருந்தது. இதை சரி செய்ய நினைத்த இயக்குநர், இந்த வார இறுதியில் ட்விஸ்ட் வைத்தார். அதாவது, முல்லைக்கு குழந்தை பிறக்க எடுக்கும் ட்ரீமெண்ட் தோல்வி ஆகிவிட்டது.

மேலும் நேற்றைய எபிசோடில், தனம் அண்ணியும், முல்லையும் டாக்டரை போய் பார்த்தனர். டாக்டர் முதல் முயற்சி என்பதால் பெயிலியர் ஆகி விட்டது என்கிறார். இதை தாங்க முடியாமல் முல்லை கதறி துடிக்கிறார். இந்த சிகிச்சைக்காக 5 லட்சம் வரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் செலவு செய்து இருந்தது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வரும் முல்லையை வீட்டில் இருக்கும் அனைவரும் பேசி சமாதானம் செய்கின்றனர்.

ஆனால் அவர் தொடர்ந்து அழுதுக் கொண்டே இருப்பாதால், அவரிடம் கண்ணன், கயல் பாப்பா, பாண்டியனை கொடுத்து சமாதானம் செய்கிறார். எனினும் இதன் பின்பு முல்லை தன்னுடைய ரூமூக்குள் போய் விடுகிறார். அந்த நேரத்தில் ஜீவா மீண்டும் ட்ரீமெண்ட் பற்றி பேச, மீனாவுக்கு கோபம் வருகிறது.

ஏற்கெனவே 5 இலட்சம் கடன் வாங்கி செலவு செய்து விட்டாச்சு, இனிமேல் எல்லாம் கடன் வாங்க முடியாதென சொல்ல, அதற்கு ஐஸ்வர்யாவும் சப்போர்ட் செய்கிறார். இதை கதிர் கேட்டு விடுகிறார். அவரின் முகமே மாறிவிடுகிறது. ஆனால் மூர்த்தியும் தனமும் பணமெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்கின்றனர். இந்நிலையில் முல்லை குழந்தை பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? என்பது ரசிகர்களின் அடுத்த கேள்வியாக அமைந்துள்ளது.என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement