• Sep 20 2024

சொல்லக்கூடாதுன்னு டீல் போட்டுட்டு உளறிய செந்தில் - கதிர்.. உளறுவாயாக மாறிய மீனா - ராஜி..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ’சீரியலில் நேற்று செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் ஒரு டீல் போட்டுக் கொண்டனர் என்பதும் இருவரும் சொன்ன ரகசியத்தை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்பதே அந்த டீல் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் இருவரும் தங்கள் மனைவிகளிடம் டீலை மீறி உளறியது காமெடியாக உள்ளது. இன்றைய எபிசோடில் மீனா, செந்தில் ஆகிய இருவரும் தங்கள் அறையில் பேசி கொண்டிருக்கும் நிலையில் ஆக்டிங் டிரைவர் ஆக கதிர் போகப்போவதை மீனாவிடம் செந்தில் கூறுகிறார்.

அதே போல் படித்து கவர்மெண்ட் வேலைக்கு போகப் போகிறேன் என்று செந்தில் சொன்னதை ராஜியிடம் கதிர் சொல்கிறார். இருவரும் மாறி மாறி தங்கள் டீலை மறந்து கூறியது காமெடியாக இருந்தது.



இதனை அடுத்து மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் கிச்சனில் பேசிக் கொண்டிருக்கும் போது ராஜியிடம் கதிர் ஆக்டிங் டிரைவர் ஆக செல்ல போவதை மீனா உளறினார். அதேபோல் ராஜியும் உங்கள் கணவரும் படித்து கவர்மெண்ட் வேலைக்கு போகப்போவதாக ராஜியும் உளறுகிறார்.  இப்படி மாறி மாறி சொல்லக்கூடாது என்று சொன்னதை  மறந்து நால்வருமே உளறி உள்ளனர்

இதனை அடுத்து மீனா தனது கணவர் செந்திலிடம் ’நீங்கள் எனக்காக கவர்மெண்ட் வேலைக்கு போகப் போகிறீர்களா?  எனக்கு பெருமையாக இருக்கிறது, வேலை கிடைக்கிறதோ இல்லையோ எனக்காக யோசித்தீர்களே அது போதும்’ என்று பாசத்துடன் கட்டிப் பிடித்து கூறுகிறார். என் தம்பி உளறிட்டானா என்று கேட்க ஆமாம் ராஜி சொன்னார் என்று மீனா கூறுகிறார்.

அதே போல் கதிரிடம் ராஜி, ‘எதற்காக ஆக்டிங் டிரைவர் செல்ல போகிறாய்’ என்று சொல்ல அண்ணி சொன்னாங்களா என்று கூறிய கதிர், ஆமாம் செல்ல போகிறேன், எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை, நீ என்னை பற்றி கவலைப்படாதே, நீ படிக்கிற வேலையை மட்டும் பார்’ என்று கூறிவிட்டு செல்வதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.


Advertisement

Advertisement