• May 20 2024

அட நம்ம ரகுவரனின் மகனா இது..? இப்படி வளர்ந்து விட்டாரே... அப்பா இல்லாத குறையை மகன் தீர்ப்பாரா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்துக்கு காலம் எத்தனையோ நடிகர் நடிகைகள் உருவாகிய வண்ணம் தான் இருக்கின்றார்கள். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அதில் ஒரு சில நடிகர், நடிகைகளை நம்மால் மறக்கவே முடியாது. அதாவது பாடகி சொர்ணலதா, எஸ்.பிபி, சில்க் ஸ்மிதா, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் எனப் பலரையும் கூறிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் உள்ளடக்கக் கூடிய ஒருவர் தான் நடிகர் ரகுவரன்.


இவர் தமிழ் சினிமாவில் '7ஆவது மனிதன்' என்ற திரைப்படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். ஆரம்பத்தில் இவர் கதாநாயகனாகவே தனது நடிப்பினை திறம்பட வெளிப்படுத்தி வந்தார். அதனைத் தொடர்ந்து எதிர்மறை வேடங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இவர் கதாநாயகனாக நடித்த காலத்தில் பெற்ற வரவேற்பை விட வில்லனாக நடித்த காலத்தில் அதிகளவான வரவேற்பை ரசிகர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.


காலம் கடந்து எத்தனை எத்தனையோ வில்லன்கள் வந்தாலும் இவரை மட்டும் மக்களால் எப்போதும் மறக்க முடியாது. ஏனெனில் இப்போதும் இவர் இருந்திருந்தால் செம வெயிட்டான வில்லனாக வலம் வந்து கொண்டிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 




இவ்வாறாக தமிழ் சினிமாவில் பிஸியான ஒரு வில்லன் நடிகராக புகழ் பெற்று விளங்கிய ரகுவரன் நடிகை ரோஹினியை 1996-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும் சில காரணங்களால் அவர்களின் குடும்ப வாழ்க்கை கசக்கத் தொடங்கியது. இதனால் 2004-ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். எனினும் இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரின் பெயர் சாய் ரிஷிவரன் என்பதாகும்.




இந்நிலையில் தற்போது நடிகர் ரகுவரன் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் "ரகுவரன் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே, அடுத்த ஹீரோ ரெடி" என தமது பாணியில் கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது சினிமாவில் ரகுவரன் இல்லாத குறையை தீர்க்க அவரின் மகன் வருவாரா? என்ற எதிர்பார்ப்போடும் காத்திருக்கின்றார்கள். 


Advertisement

Advertisement