• May 22 2024

விஜய்யின் வீட்டிற்கு அருகில் ஜொலிக்கும் மரம்... அட அதில இப்பிடி ஒரு விஷயம் இருக்கா...? இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிச்சிட்டாருப்பா நம்ம தளபதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ்த் திரைப்பட உலகில் முதன்மை நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் தளபதி விஜய். இவருக்கு தமிழ்நாட்டில் மட்டுமன்றி புலம்பெயர் தேசங்களிலும் பல ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தன்னுடைய 18 வயதில் தனது தந்தையின் இயக்கத்தில் அமைந்த 'நாளைய தீர்ப்பு' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத் துறையில் காலடி எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பல விருதுகளை வென்ற இவருக்கு இன்றுவரை ஏராளமான பட வாய்ப்புக்களும் வந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன.


இந்த நிலையில் நமது தளபதி தொடர்பாக தற்போது ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இந்திய மக்கள் அனைவரினதும் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு ஒன்றினை விடுத்திருந்தார். அதனை இன, மத, மொழி வேறுபாடின்றி பலரும் பின்பற்றி வருகின்றனர். 


சாதாரண பொதுமக்கள் மட்டுமன்றி திரைப்பிரபலங்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தத்தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். அந்த வரிசையில் நேற்றைய தினம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வீட்டு வாசலில் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார். 



அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யும் இதற்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு விடயத்தினை செய்திருக்கின்றார். அதாவது நீலாங்கரையில் விஜய்யின் வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள மரம் ஒன்று மூவர்ண கொடியை போல் அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஜொலிக்கின்றது. குறிப்பாக விஜய்யின் வீடு அமைந்துள்ள தெருவின் முனையில் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதனை நிரூபிக்கும் வகையில் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய் தான் இவ்வாறு ஏற்பாடு செய்துள்ளாரா அல்லது வேறு யாராவது இவ்வாறு அலங்காரம் செய்துள்ளார்களா என்பது பற்றி வடிவாக தெரியவில்லை. இருப்பினும் விஜய் வீடு அருகே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு உள்ளமையால் சமூக வலைதளங்களில் இது பெரியளவில் பேசு பொருள் ஆகி உள்ளது.



அதுமட்டுமன்றி விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக இதை நம்ம தளபதி தான் செய்திருப்பார் எனக் கூறி வருகின்றனர். அதுமட்டுமன்றி விஜய்யின் இந்த செயலுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement