• May 10 2024

டுபாயில் மகனின் பிறந்தநாளை சூப்பராக கொண்டாடிய ஜெயம் ரவி... அட என்ன ஒரு ப்ளான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகன் என்ற அந்தஸ்தைக் கொடுத்த முதல் படம் 'ஜெயம்' ஆகும். இப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தமையால் அன்றிலிருந்து இன்றுவரை ஜெயம்ரவி என்றே அழைக்கப்படுகின்றார்.


அறிமுகப் படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தமையால் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புக்களும் வந்து குவியத் தொடங்கின. அந்த வகையில் இவரின் நடிப்பில் உருவான 'தீபாவளி, எங்கேயும் எப்போதும், எம் குமரன் சண் ஆப் மகாலட்சுமி, ரோமியோ ஜூலியட், தில்லாலங்கடி, சம்திங் சம்திங்' போன்ற படங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது. 


இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வருகின்ற இவரது நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக தயாராகியுள்ள 'பொன்னியின் செல்வன்' என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இவருடன் இணைந்து பல பிரபலங்களும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பட வெளியீட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்ற வண்ணம் உள்ளன.




இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் தனது குடும்பத்துடன் டுபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு இவர்களால் குடும்பமாக எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களை அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட வண்ணமே உள்ளார். மேலும் ஜெயம் ரவி-ஆர்த்தி தம்பதிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு மகன்கள் உள்ளார்கள். அதில் அவர்களது முதல் மகன் ஆரவ் 'டிக் டிக் டிக்' என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




அத்தோடு இவர்களின் இரண்டாவது மகன் அயானின் பிறந்தநாள் ஆனது நேற்று முன்தினம் இடம்பெற்றிருந்தது. இதனையொட்டி தற்போது துபாய் சென்றுள்ள ஜெயம் ரவி தனது மகன் அயானின் 8ஆவது பிறந்தநாளை அங்கு வித்தியாசமான முறையில் சூப்பராக கொண்டாடியுள்ளார். 


இதனை அவரது மனைவி ஆர்த்தி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டிருக்கின்றார். இந்தப் பதிவானது தற்போது ஜெயம் ரவி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமன்றி பல திரைப்பிரபலங்களும் அயானிற்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 



Advertisement

Advertisement

Advertisement