பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது ஆரம்பமாகி கலகலப்பிற்கும், விறுவிறுப்பிற்கும் கொஞ்சமும் பஞ்சமில்லாத வகையில் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 19 போட்டியாளர்களே மீதமாக உள்ளனர். எத்தனை போட்டியாளர்கள் இருந்தாலும் இதில் சண்டைக்கு என்றைக்குமே பஞ்சம் இருப்பதில்லை.
இந்நிகழ்வானது தற்போது 3ஆவது வாரத்தை நிறைவு செய்ய காத்திருக்கின்றது. அந்தவகையில் இந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் இறுதியில் ஒருவர் வெளியேற்றப்படுவார். அந்தவகையில் கடந்த வாரம் சாந்தி வெளியேற்றப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பது குறித்த கருத்துக் கணிப்புக்கள் ரசிகர்களிடம் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஒரு சிலர் அசீமையும், வேறு சிலர் அசல் கோளாரையும் கூறி வருகின்றனர்.
காரணம் என்னவெனில் அசீமுக்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையில் இடம்பெறுகின்ற சில வாய்க்கலப்புக்கள் தான். அதுமட்டுமல்லாது அசல் கோளாரின் அலப்பறைகளும் தாங்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. இவர் பெண்களுடன் நடந்து கொள்ளும் விதம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது.
இந்நிலையில் இன்றைய தினத்திற்குரிய முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் நம்ம ஆண்டவர் என்றைக்குமே இல்லாத வகையில் யூத் போன்ற தோற்றத்தில் வருகை தந்திருக்கின்றார். அதில் அவர் கூறியது ரசிகர்கள் பலரையும் குழப்பத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது.
அதாவது "பழி போடுறது ஈஸி, ஆனால் பழியைத் தாங்கிறது கஷ்டம் என்பதை அவங்களுக்கு புரிய வைக்கணும்" எனக் கூறி இருக்கின்றார். அத்தோடு "சில பேரை காப்பாற்ற வேண்டும், சில பேரை யார் நினைச்சாலும் காப்பாற்ற முடியாது" எனவும் கூறி ரசிகர்கள் மனதில் குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கார் நம்ம ஆண்டவர்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வாரம் யார் காப்பாற்றப்படுவார், யார் வெளியேற்றப்படுவார் என்பது தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர்.
இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!
Listen News!