• Apr 28 2024

நாகசைத்தன்யா-சமந்தா பிரிவிற்கு காரணம் அமீர்கானே…முழு கதையும் எனக்குத் தெரியும்...பகீர் தகவலை வெளியிட்ட பிரபலம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் நடிகை சமந்தா. இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'யே மாயே ஷெஷாவே' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து பல வெற்றி படங்களைக் குவித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தெலுங்கு முன்னணி நட்சத்திர நடிகரான நாகசைத்தன்யாவை காதலித்து 2017 இல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக 2021 இல் விவாகரத்து செய்து கொண்டனர். இவ்விவகாரத்து தொடர்பான தகவல்கள் பல கிசுகிசுக்களாக மாறி இணையத்தில் கசிந்துள்ளன. எனினும் இவர்கள் இருவரது பிரிவுக்குமான உண்மையான காரணம் இதுவரைக்கும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இவ்விவகாரத்து சர்ச்சை தொடர்பான மற்றுமொரு தகவலை பாலிவுட் சினிமா விமர்சகர் கமல் ஆர்கான் என்பவர் வெளியிட்டுள்ளார். இதில் இவர் தெரிவித்த கருத்து என்னவெனில் சமந்தா மற்றும் நாகசைத்தன்யா ஆகிய இருவரின் பிரிவிற்கு முழு காரணமாக அமைபவர் ஹிந்தி நடிகர் அமீர் கான் என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தனது ட்விட்டரில் "சமந்தாவை விவாகரத்து செய்வதற்காக நாகசைத்தன்யாவை அமீர் கான் வற்புறுத்தியதாகவும் இவர்கள் இருவரினதும் பிரிவிற்கான முழுக்கதையும் தனக்கு தெரியும்" என்று தெரியப்படுத்தியுள்ளதோடு, அமீர் கானை 'கறுப்பு இருதயம் கொண்டவர்' எனவும் வர்ணித்துள்ளார். மேலும் "இவர்களின் பிரிவிற்கான காரணம் விரைவில் அனைவருக்கும் பகிரங்கமாக வெளிவரும்" எனவும் இத்தகவலை பகிர்ந்துள்ளார் .

இவரின் இந்த திடீர் பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டு பண்ணியிருப்பதோடு இவர் வெளியிட்ட இந்தத் தகவலானது தற்போது இணையத்தில் பரவலாகப் பேசப்பட்டும் வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement