• May 02 2026

மறைந்த நடிகருக்கு வழங்கப்படப்போகும் விருது! அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிரேமலதா !

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

நல்ல நடிகர்களும் சரி , சிறந்த அரசியல் வாதிகளையும் சரி மக்கள் இருக்கும் போது கொண்டாடாமல் அவர் மறைந்த பின்பு அவர் அருமையை உணர்ந்து கொள்வர். அவ்வாறே சமீபத்தில் மரணமடைந்த வியகாந்த் பற்றி புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.


எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜிக்கு இடையில் ஜெமினிகணேசன் வந்தது போன்றே ரஜனி காந்த் மற்றும் கமலகாசனுக்கு  இடையில் போட்டியாக வந்த நடிகர் விஜயகாந்த் ஆவார். இவர் சினிமாவில் பிரபாமானதும் அரசியலிலும் இறங்கினார். இவரது அன்பான குணங்களினால் தமிழ் நாட்டு மக்களால் மறக்கமுடியாத தலைவராக உள்ளார்.  


இந்த நிலையிலேயே சென்னையில் தே.மு.தி.க. சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர் சந்திப்பில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு மே 9ஆம் தேதியன்று பத்ம பூஷன் விருது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா கூறியுள்ளார்.


Advertisement

Advertisement