• May 13 2024

ஆர்யா-சந்தானத்துடன் மீண்டும் இணையும் கலக்கல் காமெடி திரைப்படம்…உருவாகவுள்ள பாகம்-2..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஆர்யா. நடிகராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் வளர்ந்து வரும் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருகின்றார். இவர் விஷ்ணுவர்த்தனின் இயக்கத்தில் 2005 இல் வெளியான 'அறிந்தும் அறியாமலும்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகிய படங்களாக 'ஓரம் போ', 'நான் கடவுள்', 'மதராசபட்டினம்', 'பாஸ் என்கிற பாஸ்கரன்',' சிக்கு புக்கு', 'வேட்டை', 'சேட்டை', 'ராஜா ராணி', 'இரண்டாம் உலகம்' மற்றும் 'ஆரம்பம்' போன்ற பல படங்கள் காணப்படுகின்றன. கிட்டத்தட்ட 25 இற்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்துள்ள ஆர்யா தனக்கென ஓர் தனித்துவமான பாணியில் நடிக்கும் திறமை கொண்டவர்.

இவ்வாறாக ஓய்வில்லாமல் இன்றுவரை பல படங்களில் நடித்து வருகின்ற ஆர்யாவின் நடிப்பில் 2010 இல் வெளிவந்த'பாஸ் என்கிற பாஸ்கரன்' என்ற திரைப்படத்தை இன்றுவரை நம்மால் மறக்க முடியாது. இப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரிடம் இருந்தும் நல்ல வரவேற்பினையும், சிறந்த விமர்சனங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தினை ராஜேஷ் இயக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து சந்தானம், நயன்தாரா உட்பட மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 100 நாட்களை தாண்டி ஓடிய ஒரு வெற்றி திரைப்படம் ஆகும். அதுமட்டுமன்றி முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்ட திரைப்படமாகவே இது காணப்பட்டது. ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த சிறந்த வெற்றி திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து இயக்குநர் ராஜேஷ் வெளியிட்ட தகவல் பின்வருமாறு உள்ளது. அதாவது "'பாஸ் என்கிற பாஸ்கரன்' படம் வெற்றி பெற்றதிலிருந்தே அதன் இரண்டாம் பாகத்தை இயக்குவது குறித்து ஆர்யா, சந்தானம் ஆகிய இருவரிடமும் நான் அடிக்கடி பேசிக்கொண்டுதான் இருக்கின்றேன்" எனக் கூறியிருக்கின்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் "இருப்பினும் ஆர்யா மற்றும் சந்தானம் ஆகிய இருவரின் கால்ஷீட்னு எல்லாம் ஒரே நேரத்துல கிடைக்கும் பட்ஷத்திலும், சரியான ஸ்கிரிப்ட் அமையும் போதும் , எல்லாம் தானாக கைகூடி வரும்" எனவும் கூறி உள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement