தமிழ் சினிமாவில் சிறப்பாகத் திகழும் இயக்குநர் செல்வராகவன், தற்போது “மெண்டல் மனதில்” எனும் புதிய படத்தின் இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இப்படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டியவாறு சில படப்பிடிப்பு க்ளிக்ஸ்களை G.V. பிரகாஷ் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மேலும், "இந்த படத்தின் ஆல்பம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது" என அவர் எழுதிய கருத்தும், ரசிகர்களிடம் ஒரு நெகிழ்ச்சியான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
செல்வராகவன் தமிழ் சினிமாவில் புத்துணர்ச்சி கொண்ட கதை சொல்லல், உணர்வுபூர்வமான கதாநாயகர்கள், திரைக்கதைகள் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளம் பெற்றவர். அவரின் இயக்கத்தில் இதுவரை வெளியாகிய “ஆயிரத்தில் ஒருவன்”, “மயக்கம் என்ன” போன்ற திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான புரட்சிப் படங்களாக இருந்தன.
இப்போது, அந்த பாரம்பரியத்தைத் தொடரும் வகையில் உருவாகும் “மெண்டல் மனதில்” திரைப்படம், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் ஜி.வி.பிரகாஷ், இப்படத்தில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!