தென்னிந்திய திரையுலகில், தனது அழகு, கவர்ச்சி, மற்றும் கலையாற்றலால் முன்னணியில் நீண்ட காலமாக திகழ்ந்து வரும் நடிகை ஸ்ரேயா சரண், தற்போது தனது குடும்ப வாழ்க்கையையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
அண்மையில், ஸ்ரேயா தனது குழந்தையுடன் ஸ்விம்மிங் பூலில் எடுத்த அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நடிகை ஸ்ரேயா சரண் பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ்பெற்றார்.
அத்தகைய நடிகை அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகளுடன் ஸ்விம்மிங் பூலில் நேரத்தை கழிக்கும் இனிமையான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வைரலான போட்டோஸ் இதோ.!
Listen News!