• Jan 30 2026

துபாய் சென்று அஜித்தை நேரில் சந்தித்த மாதவன்; இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

துபாயில் உள்ள பிரபல ஆட்டோடிரோமில் நடிகர் அஜித் குமாரை நடிகர் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் நேரில் சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அஜித் குமாரும், மாதவனும் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பின் அடிப்படையிலேயே நடைபெற இருந்த கார் ரேஸுக்கு முன்பு, நண்பர் அஜித்தை சந்திக்க மாதவன் துபாய் ஆட்டோடிரோமிற்கு வருகை தந்துள்ளார்.


இதற்கு முன்பு நடைபெற்ற அஜித் குமார் கலந்து கொண்ட கார் பந்தயத்தை மாதவன் நேரில் பார்த்து ரசித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் போட்டியில் அஜித் குமாரின் ரேஸிங் அணி வெற்றி பெற்றபோது, அந்த வெற்றியை மாதவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடியதாகவும் கூறப்படுகிறது. 


அஜித் குமாரும் மாதவனும் மட்டுமல்லாது, இருவரின் குடும்பங்களும் ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக பழகி வரும் நட்புறவு கொண்டவர்கள். இந்த குடும்ப நட்பு சினிமா வட்டாரத்திலும் ரசிகர்களிடையிலும் பேசுபொருளாக உள்ளது.


மணிரத்னம் இயக்கிய ‘அலைபாயுதே’ திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகை ஷாலினி, அஜித் குமாரின் மனைவியாவார். அந்த திரைப்படத்திலிருந்தே மாதவனும் ஷாலினியும் நல்ல நண்பர்களாக இருந்து வருவதால், அந்த நட்பு காலப்போக்கில் குடும்ப நட்பாக மாறியுள்ளது.


மேலும், விரைவில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்கும் ரேஸிங் அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement