• Jan 30 2026

நான் ரொம்ப நாளா சொல்லணும்னு ஆசைப்பட்ட விஷயம் இது.! செல்வராகவன் பகிர்ந்த வீடியோ!

Aathira / 20 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரான செல்வராகவன், தனித்துவமான திறமையால் ரசிகர்களிடையே தனித்தானாகக் காட்சியளிக்கிறார். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை போன்றவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

இதிலும், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகம் குறித்து ரசிகர்களில் கேள்வி எழுந்து வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்குவதாக அறிவித்திருந்தார், ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இதற்குப் பிறகு அறிவிப்புகள் வெளிவரவில்லையாம்.

2006 ஆம் ஆண்டு செல்வராகவன் சோனியா அக்வர்வாலை திருமணம் செய்தார், ஆனால் குடும்ப பிரச்சினைகளால் அவர்கள் விவாகரத்து செய்தனர். 

பின்னர் கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்து, அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்களுடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் சந்தோஷமாக இருந்த போதிலும், சமீபத்தில் வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. 


ஆனால் இதற்குத் தொடர்பாக இருவரும் வெளிப்படையாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. செல்வராகவன் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்துகளை பகிர்வது மட்டும் காணப்படுகிறது.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். அதில் அவர்,

நான் ரொம்ப நாளாக சொல்லணும்னு ஆசைப்பட்ட விஷயம். எது எப்படி நடக்கணும் என்று கடவுள் துல்லியமாக கணக்கு போட்டு வைத்துள்ளார். அது கஷ்டமாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் ஏற்கனவே கணிக்கப்பட்டது தான் என கூறியுள்ளார். இதோ அவருடைய வீடியோ..

Advertisement

Advertisement