• May 04 2024

லோகேஷ் இந்த வேலை தான் பார்த்திட்டு வருகிறாரு, அதுக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை- ஓபனாகப் பேசிய இயக்குநர் பிரசாந்த் நீல்

stella / 4 months ago

Advertisement

Listen News!


கேஜிஎப் என்னும் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறி இருப்பவர் தான் பிரசாந்த் நீல். இவரது இயக்கத்தில் வெளியான இப்படத்தின் இரண்டு பாகமும்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனை அடுத்து நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். மிகுந்த எதிர்பார்ப்பின் மத்தியில் உருவாகி வரும் இப்படத்தில் பிரபாசுடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஈஸ்வரி ராவ், சரண் ஆகியோர் முக்கியமான கதாபத்திரதில் நடித்துள்ளனர்.


 கே.ஜி.எப் படத்தை போலவே, சலார் திரைப்படமும் இரண்டு பாகங்களாக உருவாக்கவுள்ளார்.இந்நிலையில் பேட்டியொன்றில் பங்கேற்ற பிரசாந்த் நீல், சலார் திரைப்படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர்.

இவர்களின் நட்புப் பயணத்தைத் தான் இரண்டு பாகங்களாக காட்டப் போகிறோம். சலார் படத்திற்க்கும் கே.ஜி.எப் படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.கே.ஜி.எப். 1980 பீரியட் களில் இருப்பது போன்றது. இந்தப் படம் தற்போதைய காலகட்டத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.


மேலும் தமிழ் சினிமாவில் லோகேஷ் கனகராஜ் படங்களை இணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்று பிரஷாந்த் நீல் பாராட்டுகளை தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement