• Oct 01 2025

பாகுபலி இயக்குநருடன் இணையும் அல்லு அர்ஜுன்... மாஸான காம்போவின் லேட்டஸ்ட் அப்டேட்.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பான் இந்தியா சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்திய சினிமாவின் மிகப்பெரும் இயக்குநர் SS. ராஜமெளலி உடன் இணைவது என்ற செய்தி சமீபகாலமாக வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இக்கூட்டணியின் அதிகாரபூர்வ அறிவிப்பு நாளுக்குநாள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அந்த செய்தி வெளியாகியுள்ளது.


இவர்கள் இருவரும் இணையும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 1, 2025) முதல் துவங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் உறுதி செய்கின்றன. இதுவே இந்திய சினிமாவின் அடுத்த பெரும் பரபரப்பான படம் என கருதப்படுகிறது.

அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தினால் இந்திய அளவில் முன்னணி நடிகராக உயர்ந்தவர். அவரது ஸ்டைலும், நடிப்புத் திறனும் ரசிகர்கள் மத்தியில் பிரமாதமான வரவேற்பை பெற்றுள்ளன. மறுபக்கம், SS. ராஜமெளலி இந்திய சினிமாவை உலகத்தரத்தில் எடுத்துச் சென்ற இயக்குநர். பாகுபலி மற்றும் RRR ஆகிய படம் மூலம் இவர் பெயர் சர்வதேச ரீதியில் நிலைபெற்றது.


இப்போது, இந்த இருவரும் இணைவது ஒரு dream combo என ரசிகர்களும், சினிமா வட்டாரங்களும் கருதுகின்றனர்.

Advertisement

Advertisement