தூத்துக்குடி அருகே +2 மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் இந்த சம்பவம் குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான முத்துக்குமரன் இந்த சம்பவம் குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறிய கருத்துகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

தூத்துக்குடியில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் போட்டியாளரான முத்துக்குமரன் தனது சமூக ஊடகப் பதிவில் இந்த சம்பவம் குறித்து தனது கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தனது பதிவில், “தமிழ்நாடு அரசு என்ன பண்ணுறீங்க? சட்டம் வேணாம். யாராவது பாலியல் கொடுமை செய்தால் அவனை ஊர் மத்தியில் நிற்கவிட்டு கொல்ல வேண்டும். வாழ்நாள் சிறையில் விட வேண்டாம். இன்னொருத்தன் அப்படிச் செய்ய நினைக்காத மாதிரி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்,” என்று தனது கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
முத்துக்குமரனின் இந்த கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் அவரது பதிவை பகிர்ந்து தங்களது கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்து பலரிடமும் காணப்படுகிறது.
Listen News!