• Apr 27 2024

கல்யாண மண்டபத்தை விட்டு தப்பி ஓடிய வெண்பா- சாந்தி மூலம் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொண்ட கண்ணம்மா

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோடில் வெண்பா மண்டபத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் இந்த பக்கம் பாரதி டிஎன்ஏ ரிசல்ட்க்காக காத்துக் கொண்டிருக்க அப்போது வெண்பா பாரதிக்கு போன் போட்டு நான் மண்டபத்தில் இருந்து தப்பிச்சிட்டேன் பொன்னியம்மன் கோயிலுக்கு தான் வந்துட்டு இருக்கேன் நீ கோவில் வெளியே வந்து  காத்துக்கிட்டு இரு, அங்க ஒரு அக்கா கிட்ட மாலைக்கு சொல்லி இருக்கேன் என சொல்ல பாரதி நான் இன்னும் வரவில்லை, வீட்டில் தான் இருக்கிறேன் என சொல்ல வெண்பா அதிர்ச்சி அடைகிறாள்.


என்னை ஏமாத்திடாதே பாரதி நீ வரலன்னா நான் இப்படியே காரை எங்கேயாவது விட்டு ஆக்சிடென்ட் பண்ணி இறந்து போயிடுவேன் என்னை நீ பிணமா தான் பாக்கணும் என மிரட்ட பாரதி என் வீடு பக்கத்துல தான் இருக்கு பத்து நிமிஷத்துல வந்துடுவேன் என சொல்லி டி என் ஏ டெஸ்ட் அதுக்குள்ள வந்துடும் நாம கிளம்பி போகலாம் என முடிவெடுக்கிறார்.

இந்த பக்கம் வெண்பா காணாமல் போனதை நினைத்து எல்லோரும் அழுது புலம்பிக்கொண்டிருக்க அப்போது சாந்தி நாம அமைதியா இருந்தா சந்தேகம் வந்துடும் என கணக்கு போட்டு அழுது டிராமா போட கண்ணம்மாவுக்கு சாந்தி மேல் சந்தேகம் வந்து வெண்பா எங்கே என கேட்க எனக்கு தெரியாது என பொய் சொல்ல பளாரென அறைந்து கேட்க அப்படியும் எனக்கு தெரியாது என சொல்கிறார்.


பிறகு அரிவாள் மனையை கழுத்தில் வைத்து மிரட்டி கேட்க வெண்பா பாரதியை கல்யாணம் பண்ணிக்க போறாங்க என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய  எபிசோட் முடிவடைகிறது.


Advertisement

Advertisement

Advertisement