தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திக் இயக்கத்தில் அதிரடியாக உருவாகியுள்ள திரைப்படம் 'நித்தம் ஒரு வானம்'. இப்படமானது எதிர்வரும் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கின்றார். மேலும் இவரோடு இணைந்து அபர்ணா பாலமுரளி, ரித்து வர்மா, சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அத்தோடு வியாகோம் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் கோபி சுந்தர் பிரமாண்டமாக இசையமைத்துள்ளார்.
தமிழில் 'நித்தம் ஒரு வானம்' என்ற தலைப்பில் உருவான இப்படமானது மலையாளத்தில் 'ஆகாசம்' என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கின்றது. இதையடுத்து 'நித்தம் ஒரு வானம்' நடிகை அபர்ணா பாலமுரளி மற்றும் இயக்குநர் கார்த்திக் ஆகியோர் இணைந்து ஊடகங்களுக்கு பல பேட்டிகளை அளித்து வருகின்றனர்.
இதில் அவர் 'நித்தம் ஒரு வானம்' படம் குறித்தும் அவர்களின் சினிமா பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது அவர் கூறுகையில் "கதைக்கு தேவை என்பதால் இதில் மூன்று கதாநாயகிகள் இருக்கிறார்கள். படம் பார்த்து முடித்த பின்பு தேவையற்றது எதையும் நினைக்கமாட்டீர்கள். கதாபாத்திரங்களாக மூன்று பேரும் அவர்களுக்கான செயல்திறனை சிறப்பாக செய்திருக்கிறார்கள்" எனக் கூறியிருக்கின்றார் கார்த்திக்.
அதுமட்டுமல்லாது "படம் முடித்து வெளிவரும் போது சர்ப்ரைஸாக வேறு ஒன்று இருக்கும்" என்றும் கூறியுள்ளார் அப்படத்தின் இயக்குநரான கார்த்திக். இவர் அவ்வாறு கூறியதைக் கேட்ட ரசிகர்கள் "அந்த சப்ரைஸ் என்னவாக இருக்கும்" என்பதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.
Listen News!