நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருகின்றார் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் அண்மை காலங்களில் வெளியாகிய சூரரை போற்று, ஜெய் பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் பெரும் வெற்றியை குவித்து வருகின்றது.
இந்நிலையில் நடிகர் சூர்யா 15 ஆண்டுகளுக்குப் பின்பு இயக்குநர் பாலாவுடன் இணைந்துள்ளார். ஆரம்பகாலங்களில் இயக்குநர் பாலா சூர்யாவை வைத்து ‘பிதாமகன்’, ‘நந்தா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அந்தவகையில் சூர்யா நடிக்கும் 41 வது படம் ,சூர்யா 41 என தற்காலிகமாக அழைக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகின்றது.
சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து மதுரையில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர்.இப்படத்தில் சூர்யா 2 வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று காது கேட்காத வாய் பேச முடியாத கதாபாத்திரம் என ஒரு வதந்தியும் தற்போது பரவிவருகின்றது.
மற்றும் இப்படத்தின் தலைப்பு குறித்து படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் சமீபத்தில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே தகராறு ,ஏற்பட்டதாகவும் அதனால் படப்பிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், பிரச்னை தீவிரமாகும் பட்சத்தில் படம் நிறுத்தப்படலாம் என்றும் பேசப்பட்டது.
அந்தவகையில் நடிகர் சூர்யா 41 வது படத்தின் செட்டில் இயக்குநர் பாலாவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, மீண்டும் படப்பிடிப்புக்கு வர காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டு இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்தார்.
மேலும், சூர்யா 41 படத்தின் தலைப்பு குறித்த தகவல்கள் கோலிவுட் வட்டாத்தில் பரவி வருகிறது. இந்த படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து படக்குழுவினரிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
Listen News!