• Apr 27 2024

தற்கொலைக்கு காரணம் கர்ப்பமா? நடிகையின் பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

rip
Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 நடிகை துனிஷா சர்மாவின் தற்கொலைக்கு காரணம் அவர் கர்ப்பமாக இருந்தது தான், என இணையத்தில் செய்திகள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.

20வது வயதே ஆன,நடிகை கடந்த சனிக்கிழமை, படப்பிடிப்பு தளத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தேனீர் இடைவேளையின் போது தனது மேக்கப் அறைக்கு சென்ற அவர், நீண்ட நேரமாகியும் வெளியில் வரவில்லை.இதனால், சந்தேகம் அடைந்த படக்குழுவினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியபடி இருந்தார். எனினும் இதையடுத்து, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


நடிகை துனிஷா சர்மாவின் தாய், ஷீசன் முகமது கான் தான் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் என்று புகார் கொடுத்துள்ளார். அலிபாபா தஸ்தான் இ காபூல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கியதாகவும், கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால், ஷீசன் முகமது கான் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் தாய் புகார் தெரிவித்து . இதையடுத்து, மும்பை போலீசார் நடிகர் ஷீசனை, ஐபிசி 306 பிரிவின் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைது செய்தனர்.


துனிஷா சர்மாவின் காதலனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், துனிஷா சர்மா கர்ப்பமாக இருந்ததாகவும், இதனால், காதலன் ஷீசன் முகமது கான் இப்போதைக்கு குழந்தை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் மேலும், துனிஷாவின் தொலைபேசியை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி படப்பிடிப்பு தளத்தில் துனிஷா பேசி உள்ளார். ஆனால், ஷீசன் முகமது கான் கண்டுகொள்ளாததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக பலவிதமான வதந்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.

இவ்வாறுஇருக்கையில், நடிகை துனிஷா சர்மாவின பரிசோதனை அறிக்கையை மும்பை ஜேஜே மருத்துவமனை வெளியிட்டுள்ளது. மேலும் அதில், அவர் கர்ப்பமாக இல்லை என்றும், தூக்கில் தொங்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து, துனிஷா சர்மாவின் உடல் அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இறுதி சடங்கு நடைபெற்றன.


இதையடுத்து, நடிகை துனிஷா சர்மாவின் தோழியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், துனிஷாவின் தந்தை சிறுவயதில் உயிரிழந்ததில் இருந்தே அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், இதனால், அவரது தாய் துனிஷா உடன் எப்போதும் இருப்பார் என்றார். ஆனால், எப்போதும் சிரித்துக்கொண்டே அனைவர் இடத்திலும் அழகான பேசும் சுபாவம் கொண்ட ஒரு மகிழ்ச்சியான பெண் என அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் கண்கலங்கி கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement